ஈரானில் ஒரே நேரத்தில் 11 தீவிரவாத அமைப்பினர்களுக்கு தூக்கு
டெஹ்ரான்: ஈரானில், பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஜுந்தாலா என்னும் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 11 பேர் நேற்று ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்டனர்.
ஈரானில் சன்னி பிரிவைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு ஜுந்தாலா. கடந்த வாரம் ஷியா முஸ்லீம்கள் 39 பேர் கொல்லப்பட்ட குண்டுவெடிப்பில் ஜுந்தாலாவின் 11 உறுபபினர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இந்த அமைப்பின்ர் ஈரானில் பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இவர்கள் கடவுள் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.
ஷியா முஸ்லிம்கள் ஆதிக்கத்தில் இருக்கும் ஈரானைச் சேர்ந்த ஷன்னி பிரிவினரான இவர்கள் பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தென்கிழக்கு ஈரானில் பதுங்கியுள்ளனர். இப்பகுதியில் சட்டம் என்பதே கிடையாது. இங்கு கடத்தலும், கொள்ளைச் சம்பவங்களும் அதிக அளவில் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு துவக்கத்தில் ஜுந்தாலாவை தீவிரவாத இயக்கம் என்று அமெரிக்கா அறிவித்தது.
இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலுச்சி என்ற சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். தங்கள் இனத்தின் உரிமைக்காகவே போராடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஷியா முஸ்லிம்கள் 39 பேரைக் குண்டு வைத்துக் கொன்ற வழக்கில் ஜுந்தாலா அமைப்பைச் சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது சிஸ்தான்- பலுசிஸ்தான் மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அந்த 11 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் தூக்கிலிட்டனர்.
கடந்த சில ஆண்டுகளாக ஜுந்தாலா அமைப்பு நடத்திய தாக்குதல்களில் ஏராளமான இராணுவத்தினரும், பொது மக்களும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications