தொகுதி பங்கீடு: அதிமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று 2வது சுற்று பேச்சு

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம், இந்தியக் குடியரசுக் கட்சி, டாக்டர் சேதுராமனின் மூவேந்தர் முன்னணிக் கழகம் ஆகிய சிறிய கட்சிகளுடன் மட்டுமே இதுவரை தொகுதிப் பங்கீடு முடிவடைந்துள்ளது. இந்தக் கட்சிகளுக்கு மொத்தமே 4 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஆனால், முக்கிய கட்சிகளான மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டுகளுடன் தொகுதிப் பங்கீட்டை அதிமுக இன்னும் முடிவு செய்யவில்லை.
தேமுதிக கூட்டணிக்குள் வந்துவிடும் என்று காத்திருக்கும் அதிமுக, முதலில் அக் கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்கிவிட்டே, பிற முக்கிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு செய்ய திட்டமிட்டிருந்தது.
ஆனால், தேமுதிக வருவதற்கான அறிகுறிகள் ஏதும் இன்னும் தென்படவில்லை. இதற்கிடையே அதிரடியாக பாமகவுடன் தொகுதிப் பங்கீடு உடன்பாட்டை ஒரே நாளில் முடித்துவிட்ட திமுக, காங்கிரசுனான பேச்சுவார்த்தைகளை தீவிரமாக்கியுள்ளது.
இதனால் தாங்கள் பின் தங்கி வருவதை உணர்ந்துவிட்ட அதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று 2வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியது. நாளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சு நடத்தவுள்ளது.
அதிமுக, மார்க்சிஸ்ட் இரு கட்சிகளும் ஏற்கனவே கடந்த மாதம் 29ம் தேதி ஒருமுறை பேச்சு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அப்போது அதிமுக சார்பில் அக்கட்சி நிர்வாகிகள் ஓ. பன்னீர்செல்வம், கே.ஏ. செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரும், மார்க்சிஸ்ட் சார்பில் அக்கட்சி நிர்வாகிகள் ஜி. ராமகிருஷ்ணன், டி.கே. ரங்கராஜன், கே. பாலகிருஷ்ணன் ஆகியோரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இன்றும் இவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் சந்தித்துப் பேசுனர். இதையடுத்து நிருபர்களிடம் பேசிய ராமகிருஷ்ணன், பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்ததாகவும் விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படு்ம் என்றும் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications