தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏதும் இல்லை-கருணாநிதி

திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு தொடர்பான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று இரவு சென்னையில் நடந்தது. எந்த முடிவும் எடுக்கப்படாமலே இந்தப் பேச்சு முடிவுக்கு வந்துவிட்டது.
இரு கட்சிகளின் குழுவினரும் பேச்சுவார்த்தைகளை முடித்துக் கொண்டு கலைந்த பிறகு இரவு 10.05 மணிக்கு அண்ணா அறிவாலயத்திலிருந்து வெளியே வந்த முதல்வர் கருணாநிதி, செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு முதல்வர் தந்த பதில்களும்:
கேள்வி: திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?
முதல்வர்: மூன்றாவது கட்டத்துக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கேள்வி: தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதா?
முதல்வர்: இழுபறி ஒன்றுமில்லை.
கேள்வி: காங்கிரஸ் எத்தனை தொகுதிகளை எதிர்பார்க்கிறது?
பதில்: 234 தொகுதிகள் (சிரித்தபடி)
கேள்வி: ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் இருப்பதாலேயே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதா?
முதல்வர்: அது உங்களுடைய (செய்தியாளர்கள்) கற்பனை.
கேள்வி: அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும்?
முதல்வர்: இரண்டு நாட்களில் நடக்கும்.
கேள்வி: தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸிடம் ஏதேனும் புதிய திட்டத்தை வகுத்துக் கொடுத்துள்ளீர்களா?
முதல்வர்: அது ரகசியமானது.
டெல்லியில் பேசி முடிக்கலாம் - கருணாநிதி
பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுத்துக் கொண்டே போவது, தங்கள் தேர்தல் திட்டங்களில் பெரும் தேக்கத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் பெரும் கடுப்போடு உள்ளது திமுக. எனவே தொகுதிப் பங்கீடு தொடர்பாக இனி டெல்லியில் பேசிக் கொள்கிறோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications