'காஷ்மீர் நிலைதான் லிபியாவிலும்' - இந்தியாவின் ஆதரவைக் கேட்கும் கடாபி!!

லிபியாவில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து ஆயுதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். முக்கிய நகரங்களைப் பிடிக்கும் முயற்சியை வெளிநாடுகளின் துணையுடன் தொடர்கிறார்கள். ஐநா சபை, ஐரோப்பிய நாடுகள், சில ஆப்ரிக்க நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்றவை ஆர்ப்பாட்டக்காரர்களை வெளிப்படையாக ஆதரிக்கின்றன.
இவர்களை அடக்க போர்விமானங்களையும் பீரங்கிகளையும் பயன்படுத்தி வருகிறார் அதிபர் கடாபி. அமெரிக்கா அல்லது ஐநா தலையிட்டால் ரத்த ஆறு ஓடும் என எச்சரித்துள்ளார்.
இதுவரை நடந்த கலவரத்தில் 6000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்க மீடியா செய்தி பரப்பு வருகிறது. எனவே கடாபியை சர்வதேச நீதிமன்றத்தில் கிரிமினல் குற்றவாளியாக நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன இங்கிலாந்தும் அமெரிக்காவும். அவர் மீது ஒரு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இதையடுத்து தனக்கு ஆதரவு தேடும் முற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் கடாபி.
கடந்த வாரம் நடந்த லிபிய தேசிய நாள் கொண்டாட்டத்தின்போது 5 மணிநேரம் பேசினார் கடாபி. தனது பேச்சின் போது, "காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒடுக்க இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகளைப் போன்றதுதான், லிபியாவில் அரசுக்கு எதிரானவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையும். எனவே இந்தியா தன்னை ஆதரிக்க வேண்டும்", என பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அவர் கடந்த வாரம் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி லிபியாவுக்கு எதிரான ஐநா வாக்கெடுப்பில் இந்தியாவின் நிலைப்பாடு தனக்கு மகிழ்ச்சியை அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் எதிர்காலத்தில் தங்களது எண்ணெய் வர்த்தக ஒப்பந்தம் அனைத்தையும் இந்திய மற்றும் சீன நிறுவனங்களுக்கே தரப்போவதாகவும் அவர் கூறினார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications