பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராஜ்யசபா வேட்பாளர் ப்ரவீன் சக்ரவத்தியை தொடர்பு கொண்டு பேசியிரு க்கிறார். அப்போது, அவர்கள் இருவரிடமிருந்தும் வெளிப்பட்ட ஒரு கமெண்ட் தான் தவெக -காங்கிரஸ் மேலிடங்களில் சுவாரஸ்யமாகப் பேசப்படுகிறது. இது குறித்து விசாரித்தோம். நிறைய தகவல்கள் கிடைத்தன.

ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் என்பது திமுகவில் தான் தொடங்கியது. ஸ்டாலினின் மறுமகன் சபரீசனின் டீம்மில் இருந்தார் ஆதவ். 2021-தேர்தலில் போட்டியிட திமுகவில் சீட் கேட்டார். சீட் மறுக்கப்பட்டது. மேலும், திமுகவுக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்? என்றும் திமுக தலைமை அவரிடம் கோபம் காட்டியது. இதனால் கடுப்பான ஆதவ், தன்னை ஏளனமாகப் பார்க்கும் திமுக தலைமைக்கு பாடம் புகட்ட வேண்டும் என முடிவு செய்த ஆதவ், சபரீசனிடமிருந்து விலகி, விசிக வில் சேர்ந்தார். இதற்காக கனமான ஸ்வீட் பாக்ஸ்கள் கொடுக்கப்பட்டன.

Aadhav Arjuna Praveen Chakravarty

விசிகவில் முக்கியப் பொறுப்பும் அவருக்கு வழங்கினார் திருமாவளவன். 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுகவிடம் 2 சீட்டுகளில் ஒரு சீட்டை பொதுத் தொகுதியில் கொடுங்கள் என கேட்டார் திருமா. பொதுத் தொகுதியா? யாருக்காக கேட்கிறீர்கள்? என ஸ்டாலின் கேட்க, வேறு வழியில்லாமல் ஆதவ் வின் பெயரை சொல்லியிருக்கிறார். அதற்கு எந்த பதிலையும் அப்போது ஸ்டாலின் சொல்லவில்லை. அன்றைய தினம் சாயந்தரம், ஆதவ்வுக்கு சீட் கொடுப்பதாக இருந்தால், விசிகவுக்கு 1 சீட் தான் ஒதுக்க முடியும். அதுவும் உங்களுக்காக மட்டும் தான் அந்த 1 சீட்டும் என திமுக தலைமை ஏ.வ.வேலு மூலமாக கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிட்டது.

இதனால், பொதுத்தொகுதி கேட்பதை விட்டுவிட்டு 2 தனித் தொகுதிகளை பெற்றது விசிக. நீங்கள் போட்டியிட திமுக சீட் ஒதுக்க மறுப்பதை ஆதவ்விடம் திருமா தெரிவித்தார். விசிக மூலம் சீட் வாங்கி தேர்தலில் போட்டியிட்டு, திமுக வுக்கு உணர்த்தணும்ங்கிற ஆதவ்வின் திட்டம் அன்றைக்கு பலிக்கவில்லை. இதனால் திமுக மீது செம காட்டத்தில் இருந்து வந்தார் ஆதவ். இந்த சூழலில் தான், திமுக கூட்டணியிலிருந்து விசிகவை பிரித்து விஜய்யின் தவெகவுடன் கூட்டணி வைக்க திருமாவை நகர்த்திச் செல்லும் யுக்தியை கையிலெடுத்து இயங்கினார் ஆதவ். அதற்கு முன்னோட்டமாக, பிரபல பத்திரிகையும் தனது வின் வாய்ஸ் ஆஃப் காமென் அமைப்பும் இணைந்து ஒரு புத்தக வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்தார் ஆதவ். இந்த விழாவில் விஜய்யையும் திருமாவை யும் ஒரே மேடையில் அமர வைக்கும் யுக்தி அவரால் கையாளப்பட்டது.

அந்த விழாவின் பின்னணியில் ஆதவ் உருவாக்கும் அரசியலை உணர்ந்த திமுக தலைமை, ''தங்களை எதிர்க்கும் விஜய்யுடன் ஒரே மேடையை நீங்கள் பகிர்ந்துக் கொள்ளக்கூடாது. அப்படி பகிர்ந்து கொள்வதாக இருந்தால், திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்து விட்டு நீங்கள் செல்லலாம்'' என்று திருமாவுக்கு அன்றைக்கு எச்சரிக்கை செய்தது. விஜய்யுடன் இணைந்து விசிக அரசியல் செய்வதில் உள்ள லாப-நட்ட கணக்குகளைக் கூட்டிக் கழித்துப் பார்த்து, திமுகதான் தங்களுக்கு பாதுகாப்பு என உணர்ந்து அந்த விழாவை தவிர்த்தார் திருமாவளவன்.

அந்த விழாவில் பேசிய விஜய்யும், ஆதவ்வும் திமுகவை மிக கடுமையாக விமர்சித்தனர். தேர்தல் அரசியலில் தன்னை ஒழிக்கப்பார்க்கும் திமுக மீது ஆதவ்வுக்கு இருந்த கோபம், அவருடைய பேச்சில் கனலாக வெளிப்பட்டது. அவரது பேச்சை ஜீரணிக்கமுடியாத திமுக தலைமை, ஏ.வ.வேலு மூலமாக மீண்டும் திருமாவுக்கு சில விசயங்களை உணர்த்த, 2026 தேர்தலை மனதில் நிறுத்து, ஆதவ்வை விசிகவிலிருந்து நீக்கினார் திருமாவளவன். அதன் பிறகு தான் தவெகவில் இணைந்து, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, விஜய் அமைச்சரவையில் தற்போது முக்கிய அமைச்சராக இருக்கிறார் ஆதவ் அர்ஜுனா. இப்படி ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக காய்களை நகர்த்தி அவரது அரசியலை முடக்கியது திமுக. தற்போது திமுகவுக்கு சவாலாக மாறியுள்ளார் ஆதவ் அர்ஜுனா.

அதேபோல, ராகுல்காந்தி காந்தியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் ப்ராவீன் சக்கரவத்தி. காங்கிரஸ் கட்சியின் தேசிய பொறுப்பில் இருந்து வருகிறார். 2021 தேர்தலில் ப்ரவீன் சக்கரவர்த்திக்காக மயிலாப்பூர் அல்லது மயிலாடுதுறை தொகுதியை கேட்டது காங்கிரஸ். ஆனால், ப்ரவீன் சக்கரவத்தி க்காக எந்த தொகுதி கேட்டாலும் அதனை தர மறுத்தது அறிவாலயம். இதனால், திமுக மீது ராகுலுக்கும் ப்ரவீன் சக்கரவர்த்திக்கும் கடும் கோபம். ஆனாலும் இதனை வலுமையாக எதிர்க்க இருவருக்குமே அன்றைக்கு சக்தி இல்லை. திமுக, தமக்கு தொகுதி ஒதுக்கவில்லை என்கிற கோபம் ப்ரவீனுக்கு இருந்து வந்தது.

இந்த நிலையில் திமுக தலைமைக்கும் ஆட்சிக்கும் எதிராக பி.டி.ஆர். பகிர்ந்து கொண்ட சில விசயங்கள் ஒரு கட்டத்தில் ஆடியோ ரெக்கார்டிங்காக பொது வெளியில் ரிலீஸாக, திமுக கடும் அதிர்ச்சியடைந்தது. பிடிஆர் பேசிய விசயங்கள் மீது கோபப்பட்டதை விட அதனை யார் ரிலீஸ் செய்தது என்கிற கோபம் தான் அறிவாலயத்துக்கு அதிகம் இருந்தது. அதனை ஆராய்ந்த சபரீசனின் பென் அமைப்பு, ப்ரவீன் மீது சந்தேகம் கொண்டு அவரை கைக் காட்டியது. இதனால் ப்ரவீன் மீது ஏக கோபத்தில் இருந்தார் ஸ்டாலின்.

இப்படிப்பட்ட சூழலில்தான், 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறுக்கிட்டது. மயிலாடுதுறையை பர்வீனுக்காக மீண்டும் கேட்டது காங்கிரஸ். தொகுதியை ஒதுக்குகிறோம்; ஆனா, ப்ரவீனுக்கு வாய்ப்புத் தரக்கூடாது. தந்தால் அவரது வெற்றிக்கு திமுக உழைக்காது என்று திட்டவட்டமாக சொல்லி முட்டுக்கட்டை போட்டது திமுக. இதனால் கடைசி நேரத்தில் வழக்கறிஞர் சுதாவை மயிலாடு துறையில் களமிறக்கியது காங்கிரஸ். இந்த தொகுதியை ப்ரவீனுக்காகத்தான் வாங்கினார் ராகுல். இருந்தாலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியவில்லை. தனக்கு எதிராக திமுக இருப்பதை ப்ரவீன் சக்கரவர்த்தியால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

இதனால் திமுக மீது கடும் கோபம் கொண்டிருந்த ப்ரவீன் சக்கரவர்த்தி, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூருடன் இணைந்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க பெரும் முயற்சியை எடுத்தனர். இதற்காக திமுகவை எதிர்த்து இருவரும் ஏகப்பட்ட நெகட்டிவ் கருத்துக்களை வெளிப்படுத்தினர். ஆனால், காங்கிரஸ் கட்சியில் உள்ள சில தலைவர்களின் சூழ்ச்சிகளால், இவர்களின் முயற்சி வெற்றிபெறவில்லை. தேர்தலுக்கு பிறகு திமுக கூட்டணியிலிருந்து உடனடியாக விலகி, தவெக வுடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையிலும் இடம் பிடித்தது காங்கிரஸ். இதன் பின்னணியில் ப்ரவீனின் பங்களிப்பு அதிகம். விஜய்யுடன் நெருங்கிய நட்பு வளையத்தில் ப்ரவீன் இருந்து வந்ததும் இதற்கு முக்கிய காரணம்.

ப்ரவீனின் அரசியல் வளர்ச்சியை அனைத்து கோணங்களிலும் தடுத்து வந்த திமுகவுக்கு ஒரு பாடம் புகட்ட நினைத்த ராகுல்காந்தி, ப்ரவீனுக்காக ராஜ்யசபா சீட் தரலாமே என்று கோரிக்கை வைக்க, எந்த மறுப்பையும் சொல்லாமல் பார்லிமெண்டிற்குள் நுழைய தவெகவுக்கு கிடைத்த முதல் நல்ல வாய்ப்பை காங்கிரசுக்காக, தனது நண்பருக்காக விட்டுக்கொடுத்தார் விஜய். இதோ... ப்ரவீன் சக்ரவர்த்தியை ராஜ்யசபா வேட்பாளராக அறிவித்துள்ளது காங்கிரஸ். ப்ரவீன் எம்.பி.யாவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அந்த வகையில், திமுக மிக கடுமையாக எதிர்த்த ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசில் வலிமையான அதிகாரத்தில் அமர்ந்துள்ளார். அதேபோல சட்டமன்றத் துக்கோ, நாடாளுமன்றத்துக்கோ ப்ரவீன் சக்கரவர்த்தி நுழையக் கூடாது என கங்கணம் கட்டிய திமுகவுக்கு உணர்த்தும் வகையில் நாடாளுமன்றத்துக்குள் நுழைகிறார் ப்ரவீன் சக்கரவர்த்தி.

இந்த இரண்டு சம்பவங்களையும் தான் திமுக தரப்பில் அசைப்போடப் படுகிறது. இந்த நிலையில், ப்ரவீன் சக்கரவத்தியை தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் சொன்ன ஆதவ் அர்ஜுனாவிடம், ''நமது அரசியல் வளர்ச்சியை தடுக்க சதிகள் பண்ணிய திமுகவுக்கு பெரிய அடி கொடுத்திருக்கிறோம்'' என்று சொல்ல, ''ஆமாம்... முதல் அடி கொடுத்தது நான். இரண்டாவது அடியை நீங்கள் கொடுத்துள்ளீர்கள். இவைகளுக்கு எனது தலைவர் விஜய்யும், உங்களது தலைவர் ராகுல்காந்தியும் தான் காரணம். அவர்கள் நினைத்ததால் தான் இது நடந்துள்ளது'' என்று சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஆதவ் அர்ஜுனா. இவர்கள் இருவரின் சுவாரஸ்ய பேச்சுகளை அறிந்த தவெக, காங்கிரஸ் தரப்பினர், அதனைச் சொல்லி சொல்லி திமுகவுக்கு எதிராக சிலாகித்து வருகிறார்கள்.

- சிறப்பு நிருபர் எழில்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+