பெருந்தலைவர் மக்கள் கட்சியிலிருந்து சரத்குமார் நீக்கம்!

இந்தக் கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்காமலேயே திடீரென நேற்று அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இரண்டு தொகுதிகளைப் பெற்றார் சரத்குமார். இதையடுத்து அவரை கட்சியை விட்டு நீக்கியுள்ளதாக பெருந்தலைவர் மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
சரத்குமார் நடத்தி வரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரிலேயே வரும் தேர்தலை சந்திக்கவும், தேர்தலுக்குப் பின்னர் இந்தக் கட்சியின் பெயரை பெருந்தலைவர் மக்கள் கட்சி என்று மாற்றவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில் நேற்று மாலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தார் சரத்குமார். அப்போது அவரது சமத்துவ மக்கள் கட்சிக்கும், அதனுடன் இணைந்த நாடார் சங்கங்களுக்குமாக மொத்தம் 2 தொகுதிகளை ஜெயலலிதா ஒதுக்கினார். அவை எந்தெந்த தொகுதிகள் என்பது விரைவில் முடிவு செய்யப்படும் என்று சரத்குமார் அறிவித்திருந்தார்.
இந் நிலையில் கட்சியின் அனுமதியில்லாமல் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், தலைவர் பொறுப்பில் இருந்தும், கட்சியில் இருந்தும் சரத்குமார் நீக்கப்பட்டுள்ளதாக பெருந்தலைவர் மக்கள் கட்சியின் உயர்மட்டக் குழு நேற்று இரவு அறிவித்தது.
கட்சியின் உயர்மட்டக்குழு நேற்று இரவு அறிவித்தது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர் எஸ்.டி.நெல்லை நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில்,
பெருந்தலைவர் மக்கள் கட்சி'யின் உயர்மட்டக்குழுவின் உறுப்பினர்கள், இந்திய நாடார் கூட்டமைப்பு தலைவர் எஸ்.டி.நெல்லை நெடுமாறன், தட்சணமாற நாடார் சங்கத்தலைவர் எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், மதுரை நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ், தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடு நாடார் இளைஞர் பேரவை தலைவர் டி.ராஜகுமார், சென்னை வாழ்நாடார் சங்கத்தலைவர் பி.சின்னமணி நாடார், பட்டாபிராம் நாடார்கள் ஐக்கிய சங்க பொதுச்செயலாளர் டி.தங்கமுத்து, ஈரோடு நாடார் சங்க கெளரவத் தலைவர் ஏ.மாரியப்பன் ஆகியோர் கொண்ட அவசரக் கூட்டம் சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது.
பெருந்தலைவர் மக்கள் கட்சி'யின் தலைவராக இருந்த சரத்குமார் உயர்மட்டக்குழுவின் அனுமதி இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு நாட்களிலேயே தன்னிச்சையாக சென்று அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததால் அவர் பெருந்தலைவர் மக்கள் கட்சி'யின் தலைவர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கப்படுகிறார்.
இனி அவருக்கும், பெருந்தலைவர் மக்கள் கட்சி'க்கும் எந்தவித சம்பந்தமும், தொடர்பும் கிடையாது. பெருந்தலைவர் மக்கள் கட்சி' தனது அரசியல் மற்றும் சமுதாய பணியை தொடர்ந்து செய்யும். உயர்மட்டக் குழுவும் தமிழகத்தில் உள்ள அனைத்து நாடார் சங்கங்கள், உறவின்முறை சங்கங்களும் ஒன்று சேர்ந்து இரண்டொரு நாளில் அரசியல் தொடர்பான முடிவுகளை அறிவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications