தன்னிச்சையாக தொகுதிகளை அறிவித்த ஜெ.வைக் கண்டித்து சிபிஎம் போராட்டம்
திண்டுக்கல்: தன்னிச்சையாக தொகுதிகளையும், வேட்பாளர்களையும் அறிவித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைக் கண்டித்து திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் தொகுதி கடந்த 2 தேர்தல்களாக மார்க்சிஸ்ட் வசம் உள்ளது. இத்தொகுதியில் 2001, 2006 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு பாலபாரதி எம்.எல்.ஏவாக உள்ளார். மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி மக்களின் அன்பையும், செல்வாக்கையும் பெற்றவர். சட்டசபை சிபிஎம் தலைவராகவும் உள்ளார்.
இந்த நிலையில் ராமுத்தேவர் இங்கு அதிமுக சார்பில் போட்டியிடுவார் என்று அதிமுக அறிவித்துள்ளது, சிபிஎம் கட்சியினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நேற்று அதிமுக தொகுதிப் பட்டியல் வெளியானதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திரண்டு போராட்டத்தில் குதித்தனர். நகர் முழுவதும் வரையப்பட்டிருந்த இரட்டை இலைச் சின்னம், ஜெயலலிதா பெயர் ஆகியவற்றை அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஜெயலலிதாவைக் கண்டிக்கிறோம் என்று கூறி கோஷமும் இட்டனர். பின்னர் கட்சி நிர்வாகி ஜோதிபாசு என்பவர் கூறுகையில், கடந்த10 வருடங்களாக இந்த தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல்லில் மக்கள் பணியாற்றி வருகிறது.
எங்களது விருப்ப தொகுதிப் பட்டியலில் முதல் இடத்தில் திண்டுக்கல்லைக் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் எங்களை மதிக்காமல் தன்னிச்சையாக இங்கு போட்டியிடுவதாக அதிமுக அறிவித்துள்ளது. இதை ஏற்க முடியாது, தாங்கிக் கொள்ள முடியாது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட நாங்கள் தயாராகி விட்டோம் என்றார் அவர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications