பாக். நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து- 6 பேர் பலி, 50 பேர் மாயம்: மீட்புப் பணி தீவிரம்
பலுசிஸ்தான்: பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீதேன் வாயு கசிவால் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 6 பேர் பலியாகினர். மேலும், 50 பேர் சுரங்க இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். ஆனால் அவர்கள் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிக்க குறைவு என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் தெனமேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள நிலக்ககரி சுரங்கம் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீதேன் வாயு கசிவால் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சுரங்கத்தை அம்மாநில அரசு நடத்தி வந்தது.
இது குறி்த்து அப்பகுதி சுரங்கங்களின் தலைமை கண்காணிப்பாளர் முகமது இப்திகார் கூறியதாவது,
அந்த சுரங்கத்தில் மூன்று முறை வெடிவிபத்து நடந்துள்ளது. இது நடந்தபோது சுரங்கத்திற்குள் 59 பணியாளர்கள் இருந்தனர்.
இதுவரை 6 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்த சுரங்கம் மிகவும் ஆழமானது என்பதால் அதில் சிக்கியுள்ளவர்கள் உயிர் பிழைப்பதற்கு வாய்ப்பில்லை என்றார்.
பாகிஸ்தான் சுரங்களில் இது போன்ற வெடிவிபத்து சம்பவங்கள் நடப்பது அரிது. பாகிஸ்தானின் நிலக்கரி சுரங்கங்கள் பெரும்பாலும் சிந்த் மாகாணத்திற்கு அருகில் உள்ள பலுசிஸ்தானில் தான் அமைந்துள்ளன. அங்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இருந்திருக்கலாம்.
பாகிஸ்தானில் 184 பி்ல்லியன் டன்னுக்கும் அதிகமாக நிலக்கரி இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 4 மில்லியன் டன் நிலக்கரி எடுக்கபப்டுகிறது அவை பெரும்பாலும் செங்கல் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications