அதிமுகவில் இணைந்த கடையநல்லூர் நா.ம.க. வேட்பாளர்
கடையநல்லூர்: கடையநல்லூர் தொகுதி நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் பாலசுப்பிரமணியன் என்பவர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
கடையநல்லுர் சட்டசபை தொகுதியில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நேற்று மாலை கடையநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தூர் பாண்டியன் செஙகோட்டை நகர பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வம்பளந்தான்முக்கு என்ற பகுதியில் பிரச்சாரம் செய்யும்போது அதே தொகுதியில் நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளராக போட்டியிடும் பாலசுப்பிரமணியன் என்பவர் அக்கட்சியிலிருந்தும், தேர்தலில் போட்டியிடுவதிலிருந்தும் விலகி செந்தூர் பாண்டியனுக்கு சால்வை அணிவித்து அதிமுகவில் இணைந்தார்.
பின்னர் செந்தூர் பாண்டியனுக்கு ஆதரவாக இரட்டை இல்லை சின்னத்தை கையில் ஏந்தியவாறு தீவிர வாக்கு சேகரி்ப்பில் ஈடுபட்டார். நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே தென்காசி தொகுதி கார்த்திக் கட்சி வேட்பாளர் பரமசிவன் சரத்குமார் முன்னிலையில் சமகவில் இணைந்தார். தற்போது கடையநல்லூர் தொகுதி வேட்பாளர் பாலசுப்பிரமணியன் அதிமுகவில் இணைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications