டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுப்பாடு: குடிமகன்கள் தவிப்பு
சென்னை: கோடையை முன்னிட்டு பீர் தேவை அதிகரித்துள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளில் கடந்த 2 மாத காலமாகவே பீர் தட்டுப்பாடு உள்ளது.
சென்னை, சேலம், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட நகரங்கள் முதல் கிராமங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. கிராமப்புரங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பீர் கிடைப்பது மிகவும் அரிதாகிவிட்டது.
நகரங்களில் பீர் சப்ளை குறைவாக இருப்பதால் கடைக்கு வந்தவுடனேயே விற்றுவிடுகிறது. கோடை வெயிலில் ஜில் என்று பீர் குடிக்க விரும்புபவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தும் வாங்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் பீர் தான் கிடைப்பது இல்லை.
தினமும் 70 ஆயிரம் முதல் 1 லட்சம் பெட்டி வரை பீர் பாட்டில்கள் விற்பனையாகின்றன. வழக்கமாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பீர் விற்பனை அமோகமாக இருக்கும். அதனால் கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து பீர் வகைகள் கொள்முதல் செய்து வினியோகம் செய்யப்படும்.
இந்த ஆண்டு தேர்தல் நடந்ததையடுத்து இன்னும் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து பீர் வாங்க முடியவில்லை.
மது தயாரிக்க புதிய பீர் கம்பெனிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், வளசரவாக்கத்தில் இயங்கி வந்த பீர் தயாரிப்பு கம்பெனி வேறு இடத்திற்கு மாற்றப்படுவதால் பீர் உற்பத்தி குறைந்துள்ளது. இதுவும் பீர் தட்டுப்பாடிற்கு ஒரு காரணமாகும்.
ஓட்டு எண்ணிக்கை முடிந்த பிறகுதான் பீர் தட்டுப்பாடு நீங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. அதனால் மே மாதம் இறுதி வரை பீர் தட்டுப்பாடு தொடர வாய்ப்பு உள்ளது. இந்த தட்டு்ப்பாடு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications