தயாநிதி மாறன் உள்பட 85 பேரிடம் விசாரணை நடத்த ஜேபிசி முடிவு

தயாநிதி மாறன் மட்டுமல்லாமல் இதற்கு முன்பு இருந்த அனைத்துத் தொலைத் தொடர்பு அமைச்சர்களையும் வரவழைத்து விசாரிக்கவும் ஜேபிசி தீர்மானித்துள்ளது.
அதன்படி ராசாவும் ஜேபிசி முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவுள்ளார். மொத்தம் 85 சாட்சியங்களை விசாரிக்கவுள்ளது ஜேபிசி. முன்னாள் பாஜக அமைச்சர்களான அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோரும் இதில் அடக்கம். இவர்கள் வாஜ்பாய் அமைச்சரவையில் தொலைத் தொடர்புத்துறையை பார்த்தவர்கள்.
மாறன், ராஜா மட்டுமல்லாமல் அப்போல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பப்படவுள்ளது. இதை ஜேபிசி தலைவர் பி.சி.சாக்கோ நேற்று உறுதிப்படுத்தினார். ஏர்செல் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர் பிரதாப் சி ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களில் தற்போது அதிக நெருக்கடிக்குள்ளாகியிருப்பவர் தயாநிதி மாறன்தான். இவர் மீது ஏர் செல் முன்னாள் தலைவர் சிவசங்கரன் கடுமையான புகார்களைக் கூறியுள்ளார். இதை முக்கிய சாட்சியமாக சிபிஐ எடுத்துக் கொண்டுள்ளது.தயாநிதி மாறன் மீது வழக்கு தொடரவும் அது தயாராகி வருகிறது. பிரதமரின் அனுமதிக்காக தற்போது அது காத்திருக்கிறது.
மேலும் நேற்று சிபிஐ இயக்குநர் ஏ.பி.சிங் நேற்று ஜேபிசி முன்பு ஆஜராகி தயாநிதி மாறனின் பங்கு குறித்து விளக்கியுள்ளார். இந்த அடுத்தடுத்த நிகழ்வுகளால் தயாநிதி மாறனுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.
விரைவில் தயாநிதி மாறன் பதவி விலகுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவர் விலகாவிட்டால் அடுத்த அமைச்சரவை மாற்றத்தின்போது அவர் நீக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
தயாநிதி மாறன் மீது சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்தால் உடனடியாக அவரை பதவியிலிருந்து விலகுமாறு பிரதமர் உத்தரவிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications