'பதவிக்கு வந்தாச்சு... இலாகா எங்கே?' - இது புதுச்சேரி கலாட்டா
புதுவை மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. சுயேட்சை எம்.எல்.ஏ. வி.எம்.சி. சிவக்குமார் ஆதரவுடன் அக்கட்சி தனித்து ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக என் ரங்கசாமி கடந்த மே மாதம் 16-ந்தேதி பதவி ஏற்றார். 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற அவர், இந்திரா நகர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் முதல்வராகப் பதவி ஏற்ற 22 நாட்களுக்கு பிறகு புதிதாக பி.எம்.கல்யாணசுந்தரம், சந்திரகாசு, ராஜவேலு மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய 4 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். புதுவை அமைச்சரவையில் முதல்வருடன் சேர்த்து 6 அமைச்சர்கள் இடம் பெற முடியும்.
இப்போது 5 பேர் மட்டுமே உள்ளனர். ஆறாவது அமைச்சராக தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றி பெற்ற அசோக் ஆனந்த் பெயர் சிபாரிசு செய்யப்பட்டதாகவும், சில காரணங்களால் அவரது பதவி ஏற்பு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதேநேரம் அசோக் ஆனந்துக்கு பதிலாக வேறு யாரும் அமைச்சராக நியமிக்கப்படவில்லை.
இந்த அமைச்சர் பதவியை பெறுவதில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், சுயேட்சை எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதற்கிடையே பதவி ஏற்ற 4 புதிய அமைச்சர்களுக்கும் இதுவரை இலாகா அறிவிக்கப்படவில்லை. தற்போது என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.வுடன் சேர்த்து 15 எம்.எல்.ஏ.க்களின் பலம் உள்ளது.
மொத்தம் 30 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட புதுவை சட்டசபையில் மெஜாரிட்டிக்கு 16 எம்.எல்.ஏ.க்கள் பலம் தேவை. அதேவேளையில் தற்போது சட்டசபையில் மொத்தம் 29 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளதால் 15 எம்.எல்.ஏ.க்கள் பலம் போதுமானது.
புதுவை சட்டசபையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்க முடியும். இதன்மூலம் சட்டசபையில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களின் பலத்தை உயர்த்தி கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக 3 நியமன எம்.எல்.ஏ.க்களின் பட்டியலையும், முதல்வர் ரங்கசாமி கவர்னரிடம் அளித்துள்ளதாக தெரிகிறது. ஆனாலும், இதுவரை நியமன எம்.எல்.ஏ.க்க்ள நியமிக்க அனுமதி கிடைக்கவில்லை.
சட்டசபையில் தற்போது தற்காலிக சபாநாயகராக தியாகராஜன் உள்ளார். நிரந்தர சபாநாயகர் நியமிக்கப்பட வேண்டும். இதற்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சி தரப்பில் வேட்பாளர் யார்? என்பது முடிவாகவில்லை. எதிர்கட்சிகள் ஒரு வேட்பாளரை அறிவிக்கும்பட்சத்தில் சபாநாயகர் தேர்தலில் பல பரீட்சை ஏற்படும். இத்தகைய தொடர் பிரச்சினைகளால் புதுவை அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications