ப.சிதம்பரம் மீது குறை கூறுவதை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும்: ஐ.என்.டி.யு.சி.
நெய்வேலி: மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது குறை கூறுவதை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐ.என்.டி.யு.சி. தெரிவித்துள்ளது.
இது குறித்து நெய்வேலி ஐ.என்.டி.யு.சி. ஒப்பந்த மற்றும் இன்கோசர்வ் தொழிற்சங்க கெளரவ தலைவர் குள்ளப்பிள்ளை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது,
மத்திய நிதியமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் தமிழ் இனத்துக்கு பெருமை சேர்த்துள்ள மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா தவறாக பேசியுள்ளார்.
1984-ம் ஆண்டு சிவகங்கை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சரவையில் முதன் முதலாக நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சராகவும், பின்பு 1991-ம் ஆண்டு வர்த்தகத் துறை தனி இலாகா பொறுப்பினை ஏற்று தனது நிர்வாக திறமையால் நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகிய பதவிகளைப் பெற்றார்.
மேலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வெற்றி பெற்றது தவறானது என தமிழக முதல்வர் ஜெயலலிதா விமர்சனம் செய்து வருவது கண்டனத்திற்குரியது.
அவரது நிர்வாகத் திறமை, பொருளாதார சிந்தனை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பல்வேறு முக்கிய பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்து வருகின்றது.
தற்போது ஏழை, எளிய மக்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்துவேன் என்று கூறி முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளது மத்திய அரசை நம்பித் தான்.
மத்திய அரசோடு சுமூகமான உறவு கொள்வேன் என அவர் பகிரங்கமாக கூறி வருவது மத்திய அரசின் நிதி ஆதாரத்தை பெறுவதற்காகத் தான்.
அப்படிப்பட்ட நிலையில் மத்திய அமைச்சரவையில் மிக முக்கிய அங்கம் வகிக்கும் ப. சிதம்பரம் மீது ஜெயலலிதா குறை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக நெய்வேலி தொழிலாளர்கள் சார்பில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications