இலங்கை அரசு தொலைக்காட்சி நிருபரே போர்க்குற்ற வீடியோவை ரகசியமாக விற்றார்?

Subscribe to Oneindia Tamil

Sri lanka War Crime
கொழும்பு: இலங்கை அரசுத் தொலைக்காட்சி ஊடகவியலாளர் மூலமே சேனல்-4 தொலைக்காட்சிக்கு போர்க்குற்றக் வீடியோக்கள் கிடைத்துள்ளன.

ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர இருப்பிட பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா வெளியிட்டுள்ள தகவலில் இருந்து இது உறுதியாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

2009 மே 17ம் நாள், போர் முடிவுக்கு வருவதற்கு நான்கு நாட்கள் முன்னதாக, விடுதலைப் புலிகளால் மனிதக் கேடயங்களாக வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டது குறித்த வீடியோவை ரூபவாகினி மற்றும் ஐரிஎன், சுவர்ணவாகினி ஆகியவற்றில் ஒளிபரப்புமாறு உத்தரவிட்டதாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கூறியுள்ளார்.

உள்ளூர் அலைவரிசைகளில் ஒளிபரப்பான இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ காட்சிகளில் நிச்சயமாக அந்த தொலைக்காட்சிகளின் சின்னங்கள் இடம்பெற்றிருக்கும்.

ஆனால் ஜுலை 27ம் நாள் சேனல் - 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய விடியோ காட்சிகளில் உள்ளூர் தொலைக்காட்சிகளின் சின்னங்கள் இருக்கவில்லை. அதில் சேனல்-4 தொலைக்காட்சியின் சின்னம் மட்டுமே இருந்தது.

இதிலிருந்து உள்ளூர் தொலைக்காட்சிகளுக்காக ஒளிப்பதிவு செய்யப்பட்ட விடியோக்கள் பிரதி எடுக்கப்பட்டு சேனல்-4 தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது என்றும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அரசுத் தொலைக்காட்சி குழுவினரே போர்க்களக் காட்சிகளைப் படம்பிடிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+