ராஜீவ் கொலை குற்றவாளிகளை வைத்து அரசியல் நடத்தும் திராவிடக் கட்சிகள்-பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்
மதுரை: கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் வாழும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரையும் வைத்து, திராவிட கட்சிகள் அரசியல் விளையாட்டு நடத்தி வருவதாக, பா.ஜ.க மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க., செயலாளர் முருகேசன் திருமண விழாவில், பா.ஜ.க மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது, நிலப்பிரச்னை தொடர்பாக பெருநாழி போலீஸ் காவல் நிலயைத்தில் ஊராட்சித் தலைவர் முத்துராமலிங்கம் மீது பா.ஜ.க., மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் முத்திருளப்பன் புகார் கொடுத்தார்.
ஊராட்சித் தலைவர் முத்துராமலிங்கம் அடியாட்களுடன் காவல் நிலையத்திற்கு வந்து, புகார் கொடுத்தவரை தாக்கியுள்ளார். இதை போலீசார் கண்டு கொள்ளவில்லை. கடந்த தி.மு.க. ஆட்சியில் நடந்த அராஜகம், இந்த அ.தி.மு.க. ஆட்சியிலும் தொடர்கிறது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.
பார்லிமென்டை தாக்கிய அப்சல் குருவிற்கு ஆதரவாக காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா பேசியுள்ளார். இது இந்திய ஜனநாயகத்திற்கு விரோதமானது. மத்திய அமைச்சராக இருந்தவர், இது போன்று பேசுவது அபத்தமானது.
கடந்த 2000ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி, குற்றவாளி நளினிக்கு மட்டும் தண்டனையை ஆயுளாக குறைக்க உதவியுள்ளார். ஆனால், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. முதல்வர் ஜெயலலிதா, முதல் நாள் சட்டசபை கூட்டத்தில், தூக்குத் தண்டனையை நீக்கும் அதிகாரம் தனக்கில்லை என கூறியவர், அதன்பின் ஏன் ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றினார்?
கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் செத்து, செத்து வாழும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரையும் வைத்து, திராவிட கட்சிகள் அரசியல் விளையாட்டு நடத்தி வருகின்றன. வரும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் பா.ஜ.க., போட்டியிடும். எங்கள் தலைமையை ஏற்கும் கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம், என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications