மார்த்தாண்டம் அருகே ஓணம் கொண்டாடுவதில் தகராறு: இளம் பெண் தீக்குளித்து சாவு
ஆரல்வாய்மொழி: மார்த்தாண்டம் அருகே ஓணம் பண்டிகை கொண்டாடுவதில் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தீக்குளித்து இறந்தார்.
மார்த்தாண்டம் அருகே உள்ள செருப்பாலூர் குன்னம் குளத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். பெட்டிக்கடை வைத்துள்ளார். அவரது மகள்கள் ராஜம், விஜிலாமேரி. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் விஜிலாமேரியை பூதப்பாண்டி துவரங்காடு பகுதியைச் சேர்ந்த சிவகுமாருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். அவர்களுக்கு குழந்தை இல்லை.
அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் அவர்கள் கடந்த ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் விஜிலாமேரிக்கு திருவரம்பு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 3 மாதங்களாக அவர்கள் இருவரும் ஆரல்வாய்மொழி கண்டவிளைகாடு பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். விஜிலாமேரி அங்குள்ள செங்கல்சூளையில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் விஜிலாமேரியின் தாயார் சொர்ணம் மகளுக்கு ஓணப்பொடி கொண்டு வந்தார். இதையடுத்து விஜிலாமேரியும், செல்வகுமாரும் புத்தாடை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்களுக்குள் பண்டிகை கொண்டாடுவது குறிச்சு தகராறு ஏற்பட்டது. இதையடுத்து செல்வகுமார் வெளியே சென்றுவிட்டார்.
திடீரென விஜிலாமேரி வீட்டில் இருந்த மண்ணெணெய்யை எடுத்து உடலில் ஊற்றி பற்றவைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை கனகராஜ் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வேலுமணி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications