நாங்கள் 'பிஸியாக' இருப்பதால் இடைத் தேர்தலில் போட்டியில்லை- ராமதாஸ்

இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் தற்போது திமுகவினர் மீது காவல்துறை நில அபகரிப்பு வழக்குகளைப் போட்டு வருகிறது. ஏதோ கிரிமினல்களைப் பிடிப்பது போல விடாப்பிடியாக கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். ஜாமீன் வழங்கவும் காவல்துறை கடுமையாக எதிர்க்கிறது.
காவல்துறையின் இந்த நடவடிக்கை அரசின் பழிவாங்கும் செயலாகவே தெரிகிறது. கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் கோரினால் அதற்கு காவல்துறை மறுக்கக் கூடாது.
திருச்சியில் போட்டியிட மாட்டோம்:
நாங்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதில் 'பிஸியாக' உள்ளதால், திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் போட்டியிட மாட்டோம். ஒரு வேளை அங்கு விடுதலைச் சிறுத்தைகள் தனியாகப் போட்டியிட்டு, எங்களது ஆதரவைக் கோரினால், ஆதரவைத் தருவோம்.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக, அதிமுக என யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம். அதேசமயம், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். 2 கட்டமாக நடத்தினால் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. மேலும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையைத் தான் பின்பற்ற வேண்டும். இந்தத் தேர்தலுக்கு வாக்குப் பதிவு எந்திரம் தேவையில்லை.
பொது நுழைவுத் தேர்வு-இட ஒதுக்கீடு விஷயத்தில் மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபலின் போக்கு சரியில்லை. அவர் சமூக நீதிக்கு எதிராக நடந்து வருகிறார். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சியில் தான் மத்திய-மாநில அரசு வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.
ஆனால், வெறும் 5.5 சதவீத வேலைவாய்ப்புகள் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டு வருகின்றன. இந்த விஷயத்தில் உண்மையான நிலையை விளக்க, மத்திய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார் ராமதாஸ்.
மதிமுகவுடன் கூட்டணி கிடையாது?:
மதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்குமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, திராவிடக் கட்சிகள் எதனுடனும் பாமக கூட்டணி வைக்காது என்று பதிலளித்தார் டாக்டர் ராமதாஸ்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications