முன்னாள் தமிழக ஆளுநர் பர்னாலா மகன் வீட்டில் வருமான வரித்துறை ரெய்ட்
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்: முன்னாள் தமிழக ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலாவின் மகன் ககன்ஜீத் சிங்கின் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
தமிழக ஆளுநராக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர் பர்னாலா. பஞ்சாப் திரும்பிய அவர் மீண்டும் தீவிர அரசியலில் குதித்துள்ளார். பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலை கடுமையாகவும் விமர்சித்து வருகிறார். மேலும் காங்கிரஸையும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில், அவரது மகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி ரெய்டை நடத்தினர். பர்னாலாவின் மகன் ககன்ஜீத் சிங் ரியல் எஸ்டேட் தொழிலில்ஈடுபட்டுள்ளார். மனோகர் சிங் என்பவருடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் சண்டிகரில் உள்ள அவரது வீடு, அலுவலகத்தில் வருமான வரி அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.












Click it and Unblock the Notifications