தெய்வத்தை வணங்குவதில் நானே முதல்வன்- ஜெ. குறித்து அமைச்சர் செந்தமிழன் உருக்கம்!
சென்னை: என் தெய்வமான அம்மாவை வணங்குவதில் நானே முதலில் இருக்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி புகழ்ந்து புளகாங்கிதமடைந்து பேசினார் சட்டம், நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள் துறை அமைச்சர் செந்தமிழன்.
சட்டசபையில் ஒவ்வொரு எம்.எல்.ஏவு்ம், அமைச்சரும் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளின்போது முதல்வர் ஜெயலலிதாவை கவரும் வகையில் பேசுவதை தவற விடுவதில்லை. சமீபத்தில் ஒருவர் ரஜினி பாட்டை ரீமிக்ஸ் செய்து பாடி பேசி அசத்தினார். இந்த நிலையில் நேற்று அமைச்சர் செந்தமிழன் உருக்கமான கதையைக் கூறி ஜெயலலிதாவையே சிரிக்க வைத்து ரசிக்க வைத்தார்.
செந்தமிழன் நேற்று பேசியபோது பேச்சை முடிக்கும் தருவாயில் கூறியதாவது,
கையில் உள்ள 5 விரல்களுக்குள் யார் பெரியவர் என்ற மோதல் வந்தது. அப்போது மற்ற 4 விரல்களும், தங்களை பறி உயர்வாக கூறி கொண்டன. கடைசியாக சுண்டு விரல் தன்னைப்பற்றி கூறியது.
தெய்வத்தை கைகூப்பி வணங்கும்போது நான் தான் முன்னால் இருக்கிறேன். எனவே நான் தான் பெரியவன் என்றது. இதேபோல சுண்டுவிரல் போல சிறியவனான எனக்கு பெரிய பொறுப்புகளை வழங்கியுள்ள முதல்வர் அம்மாவுக்கு என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றார். இதைக் கேட்டு ஜெயலலிதா ரசித்துச் சிரித்தார்.












Click it and Unblock the Notifications