கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி 100 பேர் சாகும்வரை உண்ணாவிரதம்: வைகோ பங்கேற்பு

கூடன்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் ரூ. 13 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணுஉலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் அணுஉலையின் கட்டுமான பணி முடிவடைந்து மின் உற்பத்திக்காக பல்வேறு கட்ட சோதனைகள் நடந்து வருகிறது. சோதனை முடியும் தருவாயில் இந்த ஆண்டு இறுதிக்குள் முதல் அணுஉலையில் இருந்து மின் உற்பத்தி தொடங்கப்பட இருக்கிறது.
இந்த அணுமின் நிலையம் தமிழக மக்களின் உயிருக்கு உலை வைக்கும், மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் அழிக்கும் என மக்கள் கருதுகின்றனர். இதனால் கூடன்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக மூட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும், ஜப்பான் சம்பவம் போன்றதொரு அவலநிலை தமிழகத்திற்கு வரக்கூடாது என்பதற்காகவும், ஜனநாயக ரீதியில் போராடும் பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ்பெற வலியுறுத்தியும் இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் ஏற்பாடு செய்தனர்.
தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு போலீசார் முறையான அனுமதி வழங்கவில்லை. இருந்தபோதிலும் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்தனர். அதன்படி நேற்று காலை 9 மணியளவில் இடிந்தகரை புனித லூர்து அன்னை ஆலயம் முன் கூடத் துவங்கினர்.
அங்கு அனுமதியின்றி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருக்க அணுசக்தி எதிரான மக்கள் இயக்கத்தினர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கத்தினர், தமிழர் களம் அமைப்பினர், புற்றுநோய்க்கு எதிரான மக்கள் இயக்கத்தினர், தமிழ்நாடு கடலோர மக்கள் கூட்டமைப்பினர் மற்றும் தூத்துக்குடி மறைமாவட்ட கிறிஸ்தவ வாழ்வுரிமை மக்கள் இயக்கத்தினர் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என சுமார் 3 ஆயிரம் பெண்கள் உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடன்குளம் அணுமின் நிலையத்தினை மூடும் வரை தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து மக்கள் பந்தலில் அமர்ந்தனர்.
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட கடலோர மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதில்லை என்றும், பள்ளிகளுக்கு தங்களின் குழந்தைகளை அனுப்புவதில்லை என்றும் முடிவு செய்தனர். மேலும் இடிந்தகரை தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கூடன்குளத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
தொடர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னிட்டு இடிந்தகரை மற்றும் கூடன்குளம் பகுதியில் உள்ள தெருக்களில் கறுப்பு கொடியேற்றப்பட்டு அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. போலீசார் அனுமதியின்றி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டதால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் ஒதுங்கியே இருந்தனர். இடிந்தகரைக்கு வெளியேயும் நின்று கொண்டிருந்தனர். இதனால் இடிந்தகரை பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.
இன்றும் இரண்டாவது நாளாக மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்ட கடற்கரை நகரமான இடிந்தகரையில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரில் 100 பேர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளதால் பதட்டம் நிலவுகிறது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இடிந்தகரை வந்து பொதுமக்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications