தமிழக மழை, வெள்ளத்திற்கு 44 பேர் பலி: தண்ணீரால் திணறும் திருப்பூர்
சென்னை: தமிழகத்தில் முதல் கட்ட வட கிழக்குப் பருவ மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 44 பேர் உயிர் இழந்துள்ளனர்.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் முதல் கட்ட வட கிழக்குப் பருவ மழை சற்றே ஓய்ந்துள்ளது. பல இடங்களில் மழை நின்று விட்ட போதிலும, சில இடங்களில் தொடர்ந்து பெய்தபடி உள்ளது.
இந்த மழையால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ழை விட்ட பகுதிகளிலும் கூட வெள்ளம் இன்னும் வடியவில்லை. குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதகிளில் பல இடங்கள் இன்னும் தீவுகளாகவே காட்சி அளிக்கிறது.
இதுவரை மழைக்கு 44 பேர் பலியாகியுள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரட்டிப்பு நிவாரண நிதியாக ரூ. 2 லட்சம் அளிக்குமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
திருப்பூரில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 பேர் இறந்துள்ளனர். வீடுகளை இழந்தவர்கள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 10 மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை, 1 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் ரூ.1000 வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அதன் கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பல ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, மஞ்சள் மற்றும் வாழை சேதமடைந்துள்ளது.
கன மழையால் ஈரோட்டில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள சென்னிமலையில் 10,000 விசைத்தறி, 5,000 கைத்தறி ஆலைகள், 60 சாயப்பட்டறைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications