தொலைக்காட்சி நிருபரானார் கிளிண்டன் மகள் செல்சியா

முன்னாள் அதிபர் பில்கிளிண்டன், தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தம்பதியரின் மூத்த மகள் செல்சியா. 31 வயதாகும் இவர், கொலம்பிய பல்கலைக்கழகத்தில் ,சுகாதார படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். கிளிண்டனின் மகள் செல்சியா தனது நீண்டநாள் தோழரான மார்க் மெஷ்வின்ஸ்கி என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்தார்.
முதுகலை படிப்பை முடித்தவுடன் மெக்கின்சி அண்ட் கோ என்ற கல்சன்டிங் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். தற்போது ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டுள்ள செல்சியா என்.பி.சி தொலைக்காட்சி நிறுவனத்தின் சிறப்பு செய்தியாளராக பணியில் சேர்ந்துள்ளார்.
சிறப்பு செய்திகள்
என்.பி.சி., தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான "மேக்கிங் ஏ டிபரன்ஸ்" என்ற நிகழ்ச்சிக்கான சிறப்பு செய்திகளை செல்சியா தருவார் என்று தொலைக்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. போற்றுதற்குரிய நற்செயல்களை செய்யும் தனிநபர்கள் பற்றியும் நிறுவனங்கள் பற்றியும் செல்சியா செய்திகள் வழங்குவார் என்றும் அவை "நைட்லி நியூஸ்" நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் எனவும் அந்நிறுவன தலைவர் ஸ்டீவ் கார்பஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும் செல்சியாவின் முதல் நியூஸ் கவரேஜ் எப்போது ஒளிபரப்படும் என்பது குறித்தோ, அது எதைப் பற்றி இருக்கும் என்பது குறித்தோ என்.பி.சி., நிர்வாகம் எதுவும் தெரிவிக்கவில்லை.
சிறப்பு செய்தியாளர் பணியில் இணைந்தாலும் தனது தந்தையின் தொண்டு நிறுவனப் பணிகளையும் அமெரிக்கன் பேலேட் பள்ளியின் நிர்வாகப் பணிகளையும் கவனித்து வருகிறார் செல்சியா என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications