தமிழகம் முழுவதும் தனியார் பஸ் கட்டணம் உயர்ந்தது!
சென்னை: அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதையடுத்து இன்று முதல் தனியார் பஸ் கட்டணமும் உயர்ந்துவிட்டது.
சென்னை நகர பேருந்துகளில் கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு 28 பைசாவிலிருந்து 42 பைசாவாக உயர்த்தபட்டுள்ளது. வெளியூர்களுக்கு செல்லும் செமி டீலக்ஸ் புறநகர் பேருந்துகளில் கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு 32 பைசாவிலிருந்து 56 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
வெளியூர்களுக்கு செல்லும் சூப்பர் டீலக்ஸ் சொகுசு பேருந்துகள் மற்றும் சூப்பர் டீலக்ஸ் புறநகர் பேருந்துகளில் கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு 38 பைசாவிலிருந்து 60 பைசாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போல அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு 52 பைசாவிலிருந்து 70 பைசவாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதே போல பிற மாவட்டங்களிலும் குறைந்தபட்ச, அதிகபட்ச பேருந்து கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
சென்னை நீங்கலாக, தமிழகம் முழுவதும் நகரப் பேருந்துகளில் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாக அதிகரிக்கப்படுள்ளது. அதிகபட்ச பேருந்து கட்டணம் 7 ரூபாயிலிருந்து 12 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரப் பேருந்துகளைப் பொறுத்தவரை குறைந்தபட்ச கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகவும்; அதிகபட்ச கட்டணம் 12 ரூபாயிலிருந்து 14 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது.
இந்த கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதலே அமலுக்கு வந்துவிட்டது. இந் நிலையில் இன்று காலை முதல் தனியார் பஸ்களிலும் கட்டணம் உயர்ந்துவிட்டது.