சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு- மத்திய அரசு திட்டம்: இந்தியாவுக்குள் நுழையுமா வால்- மார்ட்?

இதன்மூலம் வால்மார்ட், கேர்போர், டெஸ்கோ போன்ற மாபெரும் நிறுவனங்கள் இந்தியாவில் சூப்பர் மார்க்கெட்களை நேரடியாகவே தொடங்க முடியும். இப்போதுள்ள விதிகளின்படி இந்திய நிறுவனத்துடன் இணைந்து தான் இவர்கள் இந்தியாவில் ஸ்டோர்களைத் தொடங்க முடியும் என்ற நிலை உள்ளது. மேலும் இந்த ஸ்டோர்களில் அன்னிய முதலீடு 49 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்ற விதியும் உள்ளது.
ஆனால், சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாகவே நுழைந்தால் தான் விலைவாசி குறையும் என மத்திய அரசு கருதுகிறது. பெரும் பணத்துடன் நுழையும் இந்த நிறுவனங்கள் சில்லறை வணிகர்களுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும்போது, விலைகள் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், ஆரம்பத்தில் விலையைக் குறைத்து விற்று உள்நாட்டு சில்லறை வர்த்தகர்களின் 'கதையை' முடித்துவிட்டு, பின்னர் இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் விலையை முடிந்த அளவுக்கு உயர்த்திவிடும் அபாயமும் உள்ளது.
சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கவே கூடாது என்று நாடு முழுவதுமே வணிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
நமது நாட்டில் சில்லறை வணிகத்தில் கிட்டத்தட்ட ஆண்டுதோறும் 450 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பணம் புழங்குவது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த சந்தைக்குள் நேரடியாக நுழைய வால்மார்ட் உள்ளிட்ட சர்வதேச சூப்பர் மார்க்கெட் நிறுவனங்கள் நீண்ட காலமாகவே முயற்சி செய்து வருகின்றன.
ஆனால், இதனால் லட்சக்கணக்கான சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவர் என்பதால், இந்தத் திட்டத்தை இடதுசாரிகள் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் எதிர்த்து வருகின்றன.
இந் நிலையில், விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டு வர பல வகையான திட்டங்களை 'ரூம் போட்டு' யோசித்து வரும் மத்திய அரசு, இப்போது சூப்பர் மார்க்கெட்களில் மல்டி பிராண்ட் நிறுவனங்களை இறக்கிவிடுவது குறித்து ஆராய ஆரம்பித்துள்ளது.
ஆனால், இதற்கு காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications