சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு- மத்திய அரசு திட்டம்: இந்தியாவுக்குள் நுழையுமா வால்- மார்ட்?

இதன்மூலம் வால்மார்ட், கேர்போர், டெஸ்கோ போன்ற மாபெரும் நிறுவனங்கள் இந்தியாவில் சூப்பர் மார்க்கெட்களை நேரடியாகவே தொடங்க முடியும். இப்போதுள்ள விதிகளின்படி இந்திய நிறுவனத்துடன் இணைந்து தான் இவர்கள் இந்தியாவில் ஸ்டோர்களைத் தொடங்க முடியும் என்ற நிலை உள்ளது. மேலும் இந்த ஸ்டோர்களில் அன்னிய முதலீடு 49 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்ற விதியும் உள்ளது.
ஆனால், சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாகவே நுழைந்தால் தான் விலைவாசி குறையும் என மத்திய அரசு கருதுகிறது. பெரும் பணத்துடன் நுழையும் இந்த நிறுவனங்கள் சில்லறை வணிகர்களுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும்போது, விலைகள் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், ஆரம்பத்தில் விலையைக் குறைத்து விற்று உள்நாட்டு சில்லறை வர்த்தகர்களின் 'கதையை' முடித்துவிட்டு, பின்னர் இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் விலையை முடிந்த அளவுக்கு உயர்த்திவிடும் அபாயமும் உள்ளது.
சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கவே கூடாது என்று நாடு முழுவதுமே வணிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
நமது நாட்டில் சில்லறை வணிகத்தில் கிட்டத்தட்ட ஆண்டுதோறும் 450 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பணம் புழங்குவது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த சந்தைக்குள் நேரடியாக நுழைய வால்மார்ட் உள்ளிட்ட சர்வதேச சூப்பர் மார்க்கெட் நிறுவனங்கள் நீண்ட காலமாகவே முயற்சி செய்து வருகின்றன.
ஆனால், இதனால் லட்சக்கணக்கான சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவர் என்பதால், இந்தத் திட்டத்தை இடதுசாரிகள் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் எதிர்த்து வருகின்றன.
இந் நிலையில், விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டு வர பல வகையான திட்டங்களை 'ரூம் போட்டு' யோசித்து வரும் மத்திய அரசு, இப்போது சூப்பர் மார்க்கெட்களில் மல்டி பிராண்ட் நிறுவனங்களை இறக்கிவிடுவது குறித்து ஆராய ஆரம்பித்துள்ளது.
ஆனால், இதற்கு காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications