எகிப்தில் கடும் போராட்டங்களுக்கு மத்தியில் தேர்தல்: மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு
கெய்ரா: எகிப்து நாட்டில் ராணுவத்தினருக்கு எதிரான போராட்டம் வலுத்து வரும் நிலையில் நேற்று அங்கு முதல் கட்ட தேர்தல் நடந்தது. இதில் பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. இன்றும் 2வது நாளாக வாக்குப்பதிவு நடக்கிறது.
30 ஆண்டு காலம் எகிப்து நாட்டை ஆண்டு வந்த அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்ததையடுத்து அவர் பதவி விலகினார். இந்த மக்கள் போராட்டத்துக்கு ராணுவமும் மறைமுக ஆதரவு அளித்தது.
முபாரக் பதவியை விட்டு வெளியேறியதும் இடைக்கால அரசு எதையும் அமைக்காத ராணுவம், ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து நாடு முழுவதும் ராணுவத்துக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன.
இதைத் தொடர்ந்து முறைப்படி தேர்தல் நடத்துவோம் என்று அறிவித்தது ராணுவம். ஆனாலும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தேர்தல் எந்த அளவுக்கு சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடக்கும் என்பது தெரியவில்லை.
இதனால், ராணுவத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. முதலில் ராணுவம் பதவி விலகிவிட்டு, இடைக்கால அரசை அமைத்துவிட்டு, தேர்தலை நடத்த வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.
ஆனால், இதை ராணுவம் ஏற்க மறுத்து போராட்டத்தை ஒடுக்கி வருகிறது. மக்களை சமாதானப்படுத்தும் வகையில் 78 வயதான கமால் அல் கன்சூரியை இடைக்கால பிரதமராகவும் ராணுவம் நியமித்தது. இதையும் மக்கள் ஏற்கவில்லை.
முன்னாள் சர்வதேச அணு சக்திக் கமிஷனின் தலைவரும் நோபல் பரிசு வென்றவருமான முகமது எல்பராடி தலைமையில் இடைக்கால அரசை அமைக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர். இதை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் கெய்ரோவின் தக்ரீர் மைதானத்தில் குழுமியுள்ளனர்.
இந் நிலையில் ராணுவத்தினருக்கும் ஜனநாயக உரிமை கோரும் அமைப்புகளுக்கும் இடையே நடந்து வரும் சண்டையில் இதுவரை நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையே நேற்று எகிப்தில் 20 ஆண்டு காலம் கழித்து தேர்தல் நடந்தது. பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. மக்கள் பேரார்வத்துடன் வாக்களித்தனர். சில இடங்களில் 2 கிமீ தூரம் வரை நீண்ட வரிசையில் நின்று மக்கள் வாக்களித்தனர்.
தக்ரீர் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மட்டும் வாக்குப்பதிவை புறக்கணித்தனர்.
இன்று இரண்டாவது நாளாக வாக்குப்பதிவு தொடர்கிறது. தலைநகர் கெய்ரோ உள்ளிட்ட பெருநகரங்களில் இன்று அதிகபட்ச வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications