முல்லைப்பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட வேண்டும்: சிபிஎம்
மதுரை: முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் மத்திய அரசு உடனே தலையிட்டு நல்ல தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை குறித்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் 5 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இந்த நிபுணர் குழுவை தமிழக அரசும், கேரள அரசும் ஏற்றுக் கொண்டு தங்கள் பிரதிநிதிகளை அந்த குழுவில் இடம் பெறச் செய்துள்ளன.
அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவது, அணையின் பாதுகாப்பு, அணையின் ஸ்திரத்தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இந்த குழுவின் பரிசீலனையில் உள்ளது. நிபுணர் குழு பிரச்சனையின் தீவிரம் மற்றும் 2 மாநில மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கால தாமதத்துக்கு இடம் தராமல், தனது அறிக்கையை விரைந்து சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழகம், கேரளா ஆகிய 2 மாநிலங்களுக்கிடையே நீண்ட காலமாக தொடரும் முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில் சுமூக தீர்வு காண உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இதற்கிடையே 2 மாநில மக்களிடையேயும் பகைமை உணர்வு ஏற்படுத்தும் பிரச்சாரம் மற்றும் நடவடிக்கைகளுக்கு இடம் தர வேண்டாம். இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட்டு தமிழக, கேரள அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி 2 மாநில மக்களிடையே நட்புறவு மற்றும் சகஜ நிலையை உறுதிப்படுத்துமாறு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications