இப்போதாவது தமிழர்கள் ஒன்றாக இருக்கிறார்கள் என்பதைக் காட்ட வேண்டும்- கருணாநிதி

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக இன்று திமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி கூறுகையில்,
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு திருப்தி இல்லை. தமிழக அரசு அனைத்துக் கட்சிகளையும் கூட்டி விவாதிக்க வேண்டும். அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைகளைப் பெற்று தமிழக அரசு செயல்பட வேண்டும்.
உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை கேரள அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். கேரள அரசு இதைச் செய்வதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டது நல்லதல்ல. அது நிறுத்தப்பட வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள மத்திய அரசுகளின் செயல்பாடுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலேயே உண்ணாவிரதம், மனித சங்கிலிப் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திமுகவின் இந்த தீர்மானங்களுக்குப் பிறகாவது மத்திய அரசு தனது மெளனத்தைக் கலைக்கும், கலைக்க வேண்டும்.
இந்த விவகாரத்திலாவது, தமிழர்கள், தமிழக கட்சிகள் ஒன்றாக இருக்கிறார்கள் என்பதை நாம் காட்ட வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டும்.
இந்தப் பிரச்சினைக்காக மத்தியஅரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றால் அது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்றார் கருணாநிதி.
கூட்டத்தில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கலந்து கொள்ளாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி, நாடாளுமன்றம் நடந்து கொண்டிருப்பதால் அவர் வரவில்லை. போராட்டத்திலும் அவர் பங்கேற்க மாட்டார் என்றார் கருணாநிதி.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications