அணை பாதுகாப்பு: மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க மதுரை ஜகோர்ட் கிளை நோட்டீஸ்
மதுரை: முல்லைப் பெரியாறு அணையில் மத்திய பாதுகாப்பு படையை நிறுத்தக்கோரும் மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நான்கு வாரங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழக பொதுப் பணித்துறையில் தலைமைப் பொறியாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற, விஜயகுமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். கேரளாவில், தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும் கேரளா செல்லும் தமிழகப் பயணிகள், ஐயப்பப் பக்தர்கள் மற்றும் அணைப் பகுதியில் வசிக்கும் தமிழகப் பொறியாளர்களுக்கு, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். இருமாநில எல்லைப்பகுதியில் பிரச்சனை அதிகரித்து வருவதால், இதனை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க வேண்டும் என்றும், விஜயகுமார் வலியுறுத்தியிருந்தார்.
மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
தமிழக – கேரள எல்லைப் பகுதியில், பதற்றம் நிலவி வருவதால், இந்த மனு இன்று அவசர வழக்காக, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனையடுத்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த வழக்கறிஞர்கள் நிலையிலும் அவசரம் கருதி இந்த வழக்கில் பங்கேற்றனர். நீதிபதிகள் கே என் பாஷா மற்றும் வேணுகோபால் தலைமையிலான பெஞ்ச் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். அந்த நோட்டீசிற்கு 4 வார காலத்திற்க்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர்கள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications