காசு கொடுத்து மூட்டைப்பூச்சி கடி வாங்கிய பயணிகள்-பொதிகை எக்ஸ்பிரஸின் அவலம்
தென்காசி: செங்கோட்டை - சென்னை பொதிகை விரைவு ரயில் வண்டியில் மூட்டைப்பூச்சி தொந்தரவு அதிகம் இருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். காசு கொடுத்து மூட்டைப்பூச்சி கடி வாங்கி தூக்கம் இழந்து தவித்தாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
தென் தமிழக மக்களின் வசதிக்காக செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு பொதிகை விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் சென்னைக்கு பயணம் செய்ய இந்த ஒரே ஒரு ரயிலை மட்டுமே நம்பியுள்ளனர்.
மூட்டைப்பூச்சி கடி
இந்த ரயிலில் உள்ள அனைத்து பெட்டிகளும் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்பது பயணிகளின் புகார். சாதாரண முன்பதிவு செய்யப்படாத பெட்டி முதல் குளிர்சாதன வசதியுள்ள பெட்டி வரை சரிவர பராமரிக்கப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள பயணிகள் மூட்டைப்பூச்சி தொந்தரவினால் தூங்கமுடியாமல் தவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
புகாருக்கு நடவடிக்கை இல்லை
இந்நிலையில் கடந்த வாரம் இரண்டாம் வகுப்பில் சென்னை பயணம் செய்த ஒருவர் மூட்டை கடியால் அவதிப்பட்டு நேற்று முன்தினம் திரும்பி வரும்போது ஏசி பெட்டியில் வந்துள்ளார். ஆனால் ஏசி பெட்டியிலும் மூட்டை கடி விட்டு வைக்கவில்லை என புலம்பினார்.மூட்டைப்பூச்சிக் கடிக்கு ஆளாகும் வயதானவர்கள் முழு தூக்கத்தையும் இழந்து நோய்வாய்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என பயணிகள் குமுறுகின்றனர். எனவே ரயில்வே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது பொதிகை ரயில் பயணிகளின் கோரிக்கையாகும்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications