கோயம்பேடு மார்க்கெட்டில் பயங்கர வன்முறை: 100 லாரிகள், 500 டன் காய்கறி சேதம்
சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளி மீது லாரி மோதியதால் அங்கு பயங்கர வன்முறை வெடித்தது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று காலை 5.10 மணி அளவில் காய்கறி லாரிகள் காய்கறிகளை இறக்கிக் கொண்டிருந்தன. அப்போது 7ம் எண் நுழைவாயில் அருகே ஒரு லாரி காய்கறியை இறக்க வசதியாக பின்நோக்கி வந்தது. அப்போது அந்த பக்கம் சென்ற சுமை தூக்கும் தொழிலாளி சக்கரவர்த்தி (30) என்பவர் மீது லாரி மோதியது. இதில் அவருக்கு தலை, நெஞ்சு மற்றும் தோள் பகுதிகளில் காயம் ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தார்.
இத்தகவல் மார்க்கெட் வளாகம் முழுவதும் பரவியவுடன் சுமார் 500க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் 7 மற்றும் 14ம் எண் நுழை வாயில்களை மூடிவிட்டு விபத்து நடந்த 7ம் எண் வாயில் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். விபத்து ஏற்படுத்திய லாரியை அடித்து நொறுக்கினர். இது குறித்து தகவல் அறிந்த அண்ணா நகர் துணை கமிஷனர் பிரேமானந்த் சின்கா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தொழிலாளர்களை கலைந்து போகுமாறு கூறினார்கள். விபத்து ஏற்படுத்திய லாரியை வெளியே எடுக்குமாறு போலீசார் தெரிவித்தவுடன் அதற்கு மறுப்பு தெரிவித்து தொழிலாளர்கள் அந்த லாரியை சுற்றி வளைத்துக் கொண்டனர்.
பதட்டத்துடன் லாரியை எடுத்த டிரைவர் அதை பின்னோக்கி ஓட்டியபோது அங்கு நின்ற வேன் மீது மோதியது. இதில் வேன் அருகே நின்ற மற்றொரு தொழிலாளி ஆதிமூலம் (24) என்பவரின் இடது கை விரல்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து வன்முறை வெடித்தது. தொழிலாளர்கள் அங்கு காய்கறி இறக்க வந்த 100க்கும் மேற்பட்ட லாரிகளை அடித்து நொறுக்கினர். காய்கறிகள் ஏற்றிக் கொண்டு வந்த டிரக்கை கவிழ்த்தனர். போலீசார் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து போகச் செய்தனர். இதையடுத்து 200க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
காலை 10 மணி வரை மார்க்கெட் வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது. காய்கறி லாரிகள் ஒன்றொன்றாக புறப்பட்டு சென்றது. இந்த வன்முறை சம்பவத்தால் 500 டன் காய்கறிகள் சேதமடைந்தன. விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் இருவரும் கோயம்பேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த வன்முறையால் போலீஸ் துணை கமிஷனர் ஜூட் துரைபாண்டி மற்றும் தொழிலாளி பாலமுருகன் ஆகியோர் காயமைடந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
வாகனங்களை தாக்கியது, தொழிலாளிகள் மீது லாரி மோதியது, துணை கமிஷனரை தாக்கியது ஆகியவற்றிற்கு தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், துணை கமிஷனரை தாக்கிய நபரைக் கண்டுபிடித்து அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழ்ககுப் பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications