முல்லைப் பெரியாறு அணைக்காகப் போராடும் தமிழர்கள் மீது வழக்குப் போடுவதா?- சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி வந்தார். நிருபர்களிடம் அவர் கூறுகையில், "முல்லை பெரியாறு அணை பிரச்சினைக்காக தமிழகத்தில் உண்ணாவிரதம் மேற்கொள்ள போலீசாரிடம் அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது.
சுவரொட்டி ஒட்டினால் கூட வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஆனால் கேரளத்தில் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அங்கு வாழும் தமிழர்கள் விரட்டியடிக்கப்படுகின்றனர்.
தமிழக தலைவர்களின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுகின்றன. இந்த சம்பவங்களுக்கு கேரள அரசு எந்த வித வழக்கும் பதிவு செய்வது இல்லை.
முல்லை பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்பாக தற்போது தமிழகத்தில் அறவழியில் போராடினாலும் தமிழர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவது வேதனை அளிக்கிறது.
அறவழியில் போராடிய நாம் தமிழர் கட்சி தோழர்கள் திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒரு சிறைக்கு சென்று கைது செய்யப்பட்ட தோழர்களை சந்தித்து வருகிறேன். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தி கொள்ளலாம் என்று 2006-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஆனால் இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் இந்த தீர்ப்பை கேரள அரசு அமல்படுத்தாமல் இருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இதற்காக கேரள அரசு மீத மத்திய அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மத்தியிலும், கேரளத்திலும் காங்கிரஸ் ஆட்சி செய்வதே இதற்கு காரணம் ஆகும். கேரள மாநிலத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஆதாயம் அடைவதற்காக அந்த மாநில அரசு முல்லை பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக பீதியை உருவாக்கி வருகிறது," என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications