தமிழகத்தில் வாழும் மலையாளிகளை பாதுகாக்க வெப்சைட் தொடங்கிய கேரள மலையாளிகள்
நெல்லை: முல்லை பெரியாறு பிரச்சனையால் இரு மாநிலங்களிலும் எழுந்துள்ள பதற்றத்தை அடுத்து தமிழகத்தில் வாழும் மலையாளிகளை பாதுகாப்பது என்ற பெயரில் சப்போர்ட் கேரளா என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாட்டில் வாழும் மலையாளிகள் தங்கள் பெயர் விபரங்களை பதிவு செய்து கொண்டால் தக்க நேரத்தில் பாதுகாப்பு உதவிகள் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்தும், கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் கண்டனம் தெரிவித்தும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் இன்று 15வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் கோவை, கும்பகோணம், சென்னை ஆகிய இடங்களில் மலையாளிகள் நடத்தும் வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டன. நெல்லை, ஈரோடு, மதுரை ஆகிய இடங்களில் கேரளத்தினர் நடத்தும் கடைகளில் தமிழர் அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு இணையதளம்
இதனால் தமிழகத்தில் வாழும் மலையாளிகளை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு அங்குள்ள அமைப்புகளிடம் ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சப்போர்ட் கேரளா என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் வாழும் மலையாளிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மலையாளியின் பெயர், வயது, பாலினம், தொழில், போன் எண், இமெயில் முகவரி, கேரளாவில் உள்ள உறவினர்கள் பெயர், முகவரி, போன் எண், தமிழக உறவினர்களின் பெயர், முகவரி, போன் எண், கேரளாவில் உள்ள நெருங்கிய நண்பர்களின் போன் எண், பெயர், முகவரி, இமெயில் முகவரி, தமிழகத்தில் உள்ள நெருங்கிய நண்பர்களின் போன் எண், பெயர், முகவரி, இமெயில் முகவரி போன்றவை பதிவு செய்ய வேண்டும் என்று அந்த இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் கேரளாவில் உள்ள வீட்டு முகவரி, போன் எண், குடும்பத்தினர் பெயர், மற்றும் முகவரி, முதலில் எச்சரிக்கை செய்ய வேண்டியவர்கள் பெயர், முகவரி, போன் எண் ஆகிய விபரங்கள் கோரப்பட்டுள்ளன. இதை ஆன்லைனில் பதிவு செய்யும்படி அதில் கூறப்பட்டுள்ளதாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications