ஜெ. தலைமையில் இன்று கிறிஸ்துமஸ் விழா- 'அனைத்து' எம்.எல்.ஏக்களும் பங்கேற்க உத்தரவு!

சசிகலாவுடனான 29 வருட கால நட்பை நேற்று துண்டித்துக் கொண்டார் ஜெயலலிதா. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரை நேற்று பூண்டோடு அதிமுகவிலிருந்து நீக்கினார்.
இந்த நிலையில் இன்று ஜெயலலிதா தலைமையில் சென்னையில் கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறது. இதில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரும் பங்கேற்க வேண்டும் என கட்சித் தலைமையிலிருந்து உத்தரவு போயுள்ளதாம்.
இதற்கு ஒரு முக்கியக் காரணம் கூறப்படுகிறது. சசிகலா பக்கம் யாரும் இல்லை என்பதை அனைவருக்கும் பகிரங்கமாக காட்டுவதற்காக இந்தஉத்தரவு போயுள்ளதாம். அதேபோல எம்.எல்.ஏக்கள் தவிர அமைச்சர்களும் இன்றைய விழாவில் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
மேலும் மாநில அளவிலான நிர்வாகிகளும் கூட விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனராம். கிட்டத்தட்ட சட்டசபையில் நிறைவேற்றப்படும் நம்பிக்கைத் தீர்மானம் போல இன்றைய கிறிஸ்துமஸ் விழாவை அதிமுக தலைமை மாற்றியிருப்பதாக கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications