கூடங்குளம் குறித்து பிரதமரிடம் பெரிதாகப் பேசாத ஜெயலலிதா
சென்னை: சென்னை வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா கூடங்குளம் விவகாரம் குறித்து எதுவும் பெரிதாகப் பேசவில்லை.
பிரதமர் மன்மோகன் சிங் நேற்றிரவு சென்னை வந்தார். ஆளுநர் மாளிகையில் வைத்து பிரதமரை முதல்வர் ஜெயலலிதா நேற்றிரவே சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது. அப்போது அவர் பிரதமரிடம் 16 பக்கம் கொண்ட கோரிக்கை மனுவை அளித்தார். அந்த மனுவில் கூடங்குளம் விவகாரம் குறித்து அவர் எதுவும் பெரிதாக குறிப்பிடவில்லை. கூடங்குளத்தின் மின்சார உற்பத்தி துவங்க தாமதமடைந்துள்ளது என்று மட்டுமே தெரிவி்ததுள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் அச்சத்தைப் போக்க மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு மாநில அரசின் குழுவை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த முதல்வர் ஜெயலலிதா பிரதமரை சந்தித்தபோது அதுபற்றி எதுவும் பேசாதது போராட்டக் குழுவை அதிருப்தியடைய வைத்துள்ளது.
ஏற்கனவே ரஷ்யா சென்ற பிரதமர் அங்கிருந்து கொண்டு கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் துவங்கும் என்று அறிவித்து போராட்டக்காரர்களின் நம்பிக்கையில் இடியை இறக்கினார். அதற்குப் பதில் அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, மக்களின் அச்சத்தைப் போக்கி விட்டுத்தானே அணு மின் நிலையம் இயங்கும் என்று கேட்டிருந்தார். அதற்குப் பிரதமர் பதிலளிக்கவில்லை.
இந்நிலையில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் பிரதமரை நேரில் சந்தித்தும் அவரிடம் கூடங்குளம் பிரச்சனை பற்றி விளக்கம் கேட்காதது, பேசாதது போராட்டக்காரர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications