செல்போன் கட்டணம் விரைவில் உயர்கிறது!

இந்தியாவில் செல்போன் சேவைகளை ஏர்டெல், ஏர்செல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்த தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இடையே வாடிக்கையாளர்களை கவர கடும் போட்டி நிலவுகிறது.
இதனால் எஸ்.எம்.எஸ், போஸ்ட் பெய்ட், பிரீபெய்ட் உள்ளிட்ட பல தரப்பட்ட சேவைகளை வழங்கி வருகின்றன.
வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஒரு கட்டத்தில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு கட்டணங்களை குறைத்தன. ஆனால் வாடிக்கையாளர்களிடம் இருந்து எதிர்பார்த்த அளவில் வருமானம் ஈட்ட முடியவில்லை. இதையடுத்து கடந்த ஆண்டு பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 20 சதவீத கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது.
இந்த ஆண்டு போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் 20 சதவீத கட்டண உயர்வை அமல்படுத்த செல்போன் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
புதிய கட்டண முறைப்படி, செல்போனில் இருந்து பேசும் எஸ்.டி.டி. மற்றும் லோக்கல் அழைப்புகளுக்கு ஒரு நொடிக்கு ஒரு பைசா வீதம் 1 நிமிடத்திற்கு 60 பைசா என்று இருந்த கட்டணம், இனி 1 நிமிடத்திற்கு 1.20 பைசா என்று உயர்த்தப்படவுள்ளது.
அதேபோல் செல்போனில் இருந்து லேண்ட் லைன் போன்களுக்கு பேசவும் கட்டணம் உயரவுள்ளது.
போஸ்ட் பெய்ட் உபயோகிப்பாளர்களுக்கு 20 சதவீத கட்டண உயர்வை ஏற்கனவே வோடபோன் நிறுவனம் அமல்படுத்தி உள்ளது. இது குறித்து வோடபோன் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், கட்டண உயர்வு தற்போது டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் படிப்படியாக கட்டண உயர்வு அமல்படுத்தப்படும். வருவாயை கணக்கிடும் போது கட்டணம் உயர்த்துவதை தவிர்க்க முடியவில்லை. மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களும் விரைவில் கட்டண உயர்வை அறிமுகப்படுத்துவார்கள் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications