முல்லைப் பெரியாறு: மத்திய அரசைக் கண்டித்து இன்று உண்ணாவிரதம்- கேரள நிதியமைச்சர்
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணாத மத்திய அரசைக் கண்டித்து கேரள காங்கிரஸ்(எம்) கட்சியினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவிருப்பதாக அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நிதியமைச்சருமான கே.எம். மாணி தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசும், கூடாது என்று தமிழக அரசும் பிடிவாதமாக உள்ளன. இந்த பிரச்சனையால் இரு மாநில எல்லையிலும் பதற்றமான சூழல் நிலவியது. தமிழகத்தில் மலையாளிகளின் கடைகள் சேதப்படுத்தப்பட்டது. கேரளாவில் பணிபுரிந்து வந்த தமிழர்கள் தாக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காணக்கோரி கேரளாவில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அவரும் இரு மாநில முதல்வர்களும் சந்தித்து பேசி தீர்வு காண வழிவகை செய்வதாக உறுதியளித்தார்.
ஆனால் இதுவரை இந்த பிரச்சனைக்கு மத்திய அரசு எந்த தீர்வையும் காணவில்லை. இதையடுத்து கேரள காங்கிரஸ்(எம்) கட்சியின் தலைவரும், நிதியமைச்சருமான கே. எம். மாணி கூறியதாவது,
பிரதமர் மன்மோகன்சிங் முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு ஒரு மாதத்தில் தீ்ர்வு காணப்படும் என்று கூறினார். ஆனால் இதுவரை எந்த தீர்வும் காணப்படவில்லை. 2 மாதங்கள் ஆகியும் இன்னும் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட எந்த முயற்சியும் மேற்கொளளப்படவில்லை.
இதை கண்டித்து கேரள காங்கிரஸ்(எம்) மீண்டும் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளது. அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்க கட்சியின் இடுக்கி மாவட்ட நிர்வாகிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இன்று இடுக்கி சாப்பாத்து பகுதியில் அவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார்கள். மேலும் தொடர் போராட்டங்கள் குறித்து முல்லைப் பெரியாறு அணை போராட்ட குழுவினருடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்பார்கள் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications