சட்டமன்றத்தில் 'ஆக்ஷன்' செய்வது,வசனம் பேசுவது கூடவே கூடாது-ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

Dr Ramadoss
விழுப்புரம்: சட்டமன்றம் என்பது ஆக்கப்பூர்வமான யோசனைகளை அரசுக்குச் சொல்லும் இடம். அங்கு போய் ஆக்ஷன் செய்வது, வசனம் பேசுவது கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவுரை கூறியுள்ளார்.

விழுப்புரம் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஆளுங்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சகிப்பு தன்மையும் பொறுமையும் வேண்டும். அதைவிட எதிர்கட்சி உறுப்பினர்கள் சகிப்பு தன்மையும் பொறுமையும் அதிகம் இருக்க வேண்டும்.

ஸ்டூடியோவில் ஆக்ஷன் செய்வது, வசனம் பேசுவது போல் சட்டமன்றத்தில் பேசக் கூடாது. ஆக்கப்பூர்வமான யோசனைகளை சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் சொல்ல வேண்டும்.

ஆளுங்கட்சி உறுப்பினர்களை விட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும்.

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தருவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ஒரு வீடு கட்ட ரூ.1 லட்சம் போதாது. கடலூரை விட விழுப்புரம் மாவட்டத்தில் குடிசை வீடுகள் அதிகம் உள்ளன. எனவே 2 மாவட்டங்களிலும் 1 லட்சம் வீடுகளை விட கூடுதலாக கான்கிரீட் வீடுகளை கட்டி குடிசை இல்லாத மாவட்டங்களாக்க வேண்டும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+