மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவையே மதிக்காத அதிமுக அரசு- க. அன்பழகன்
சென்னை: நீக்கப்பட்ட மக்கள் நலப்பணியார்களை உடனே பணியில் சேர்க்குமாறு உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்ட பிறகும் அரசு அந்த உத்தரவை கிடப்பில் போட்டுவிட்டு மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளது என்று திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுக்குழு கூட்டத்தி்ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கும் கூட்டம் கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் நேற்று நடந்தது. அதில் திமுக பொதுச் செயலளார் க. அன்பழகன் கலந்து கொண்டு பேசியதாவது,
திமுக தமிழ் மொழி உணர்வையும், திராவிட இன உணர்வையும் அடித்தளமாகக் கொண்டு வளர்க்கப்பட்டது. ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் நலனுக்காக பாடுபடுபவர் கருணாநிதி. தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு எந்தவித நிவாரணமும் வழங்காத நிலையில் அவர்களை நேரில் சந்தித்து நிவாரணப் பணிகளை முடுக்கிவட்டவர் கருணாநிதி.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க அந்த இடங்களுக்கு அந்த அம்மையார் வந்தார்களா? ஆனால் கருணாநிதியோ உடல் நலக்குறைவால் வண்டியில் வைத்துக் தள்ளிக் கொண்டு போகும் நிலையில் இருந்தும் அதை பொருட்படுத்தாது சென்னையில் இருந்து திருவாரூர் வரை சென்றார். மேலும் வழியிலும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதிமுக அரசு தொடர்ந்து மக்களுக்கு விரோதமாகவே செயல்பட்டு வருகிறது. கூண்டோடு நீக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை உடனே பணியில் சேர்க்குமாறு உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டது. ஆனால் அதிமுக அரசோ அந்த உத்தரவை கிடப்பில் போட்டுவிட்டு மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளது என்றார்.
-
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
"சிதமுக-விற்கு லக்".. அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. ஒரு தொகுதியை ஒதுக்கிய எடப்பாடி பழனிச்சாமி! -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிகமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!











Click it and Unblock the Notifications