மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவையே மதிக்காத அதிமுக அரசு- க. அன்பழகன்
சென்னை: நீக்கப்பட்ட மக்கள் நலப்பணியார்களை உடனே பணியில் சேர்க்குமாறு உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்ட பிறகும் அரசு அந்த உத்தரவை கிடப்பில் போட்டுவிட்டு மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளது என்று திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுக்குழு கூட்டத்தி்ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கும் கூட்டம் கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் நேற்று நடந்தது. அதில் திமுக பொதுச் செயலளார் க. அன்பழகன் கலந்து கொண்டு பேசியதாவது,
திமுக தமிழ் மொழி உணர்வையும், திராவிட இன உணர்வையும் அடித்தளமாகக் கொண்டு வளர்க்கப்பட்டது. ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் நலனுக்காக பாடுபடுபவர் கருணாநிதி. தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு எந்தவித நிவாரணமும் வழங்காத நிலையில் அவர்களை நேரில் சந்தித்து நிவாரணப் பணிகளை முடுக்கிவட்டவர் கருணாநிதி.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க அந்த இடங்களுக்கு அந்த அம்மையார் வந்தார்களா? ஆனால் கருணாநிதியோ உடல் நலக்குறைவால் வண்டியில் வைத்துக் தள்ளிக் கொண்டு போகும் நிலையில் இருந்தும் அதை பொருட்படுத்தாது சென்னையில் இருந்து திருவாரூர் வரை சென்றார். மேலும் வழியிலும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதிமுக அரசு தொடர்ந்து மக்களுக்கு விரோதமாகவே செயல்பட்டு வருகிறது. கூண்டோடு நீக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை உடனே பணியில் சேர்க்குமாறு உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டது. ஆனால் அதிமுக அரசோ அந்த உத்தரவை கிடப்பில் போட்டுவிட்டு மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளது என்றார்.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
717 டாஸ்மாக்கை மூடுறதா சொன்னீங்களே! ஓட்டேரி லிஸ்ட்ல இல்லை? தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா வைத்த டிமாண்ட் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications