மின்கட்டண உயர்வு கருத்து கேட்பு கூட்டம் : மதுரையில் கூச்சல் குழப்பம்
மதுரை : மின்சார கட்டணத்தை உயர்த்துவது குறித்து மதுரையில் நடைபெற்று வரும் கருத்துக் கேட்புக்கூட்டத்தில் எதிர்ப்பு உருவானது. ஒருசிலர் முழக்கங்களை எழுப்பி கூச்சலிட்டதால் அதிகாரிகள் கருத்து கேட்ட இயலாத நிலை ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் மின் கட்டணம் உயர்த்துவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடந்து வருகிறது. இன்று மதுரை பனகல் ரோட்டில் உள்ள இந்திய மருத்துவ அரங்கத்தில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்சார ஒழுங்கு முறை ஆணைய செயலர் குணசேகரன், உறுப்பினர்கள் வேணுகோபால், நாகலசாமி ஆகியோர் கருத்துக்களை கேட்கவுள்ளனர். காலையில் இருந்தே விவசாய சங்கத்தினர், தொழில் அமைப்பினர், வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் என பல தரப்பினர் வந்துள்ளனர்.
கடும் எதிர்ப்பு
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பலரும், மின்சாரமே ஒழுங்காக கிடைப்பதில்லை இதில் மின்சார கட்டணத்தை உயர்த்துவது எவ்வாறு நியாயம் என்று கேட்டனர். மின் கட்டணத்தை உயர்த்து வதற்கு பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களைள் எழுப்பினர் . இதனால் அங்கு அதிகாரிகள் கருத்து எதுவும் கேட்க முடியாத நிலை ஏற்பட்டது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க கூடுதல் பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக அரங்கம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் அதிரடி சோதனை நடத்தினர். அரங்கத்திற்குள்ளும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். மின் கட்டணம் உயர்வு குறித்து தங்களுடைய கருத்துக்களை நேரடியாகவோ, மனுக்கள் மூலமோ அளிக்க வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னை, கோவை, திருச்சி, என நடந்து முடிந்த கூட்டங்களில் விவசாய அமைப்பினர் மற்றும் பல்வேறு சங்கத்தினர் அதிருப்தி தெரிவித்தனர். கூச்சல் குழப்பம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications