வேளச்சேரி என்கவுண்டர்- போலீஸாரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் இன்று விசாரணை
சென்னை: சென்னை வேளச்சேரியில் கொள்ளையர்கள் ஐவரை என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொன்ற வழக்கில் அதில் ஈடுபட்ட போலீஸார் 14 பேரிடமும் இன்று சிபிசிஐடி அதிகாரிகள் தனித் தனியாக விசாரணை நடத்துகின்றனர்.
சென்னை வேளச்சேரியில் வட மாநிலக் கொள்ளையர்கள் ஐவர் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். நேற்று டிஎஸ்பி வெங்கட்ராகவன் தலைமையிலான போலீஸ் குழு சம்பவம் நடந்த வீட்டை நேரில் பார்வையிட்டுஆய்வு செய்தது.
வீட்டில் உள்ள அறைகள், கொள்ளையர்கள் சுட்ட இடம், கொள்ளையர்களை போலீஸார் சுட்ட இடம் உள்ளிட்டவற்றை அவர்கள் நேரில் பார்த்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு 2 மணி நேரம் நடந்தது. இன்றும் ஆய்வு தொடர்கிறது.
இன்றைய ஆய்வின்போது தடயவியல் நிபுணர்களும் பங்கேற்றுள்ளனர். மேலும் போலீஸார் பயன்படுத்திய மற்றும் கொள்ளையர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், தோட்டாக்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்படவுள்ளது.
இந்த நிலையில், என்கவுண்டர் சம்பவத்தில் ஈடுபட்ட துணை ஆணையர் சுதாகர் தலைமையிலான போலீஸ் படையினரையும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரிக்கவுள்ளனர். ஒவ்வொருவரும் தனித் தனியாக விசாரிக்கப்படவுள்ளனர். மொத்தம் உள்ள 14 பேரும் இன்று விசாரணைக்குட்படுத்தப்படுகிறார்கள். இவர்களில் 2 பேர் உதவி ஆணையர்கள், 4 பேர் இன்ஸ்பெக்டர்கள் ஆவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications