கூடங்குளம் போராட்டத்துக்கு நிதி...4 தொண்டு நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு-வங்கிக் கணக்கு முடக்கம்
டெல்லி: கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவினருக்கு நிதியுதவி செய்ததாக 4 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. தமிழக குற்றப் பிரிவு போலீஸாரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நான்கு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
கூடங்குளம் போராட்டக் குழுவினருக்கு வெளிநாட்டிலிருந்து பெருமளவில் உதவி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி இதுகுறித்து தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். சமீபத்தில் பிரதமரே இந்தக் குற்றச்சாட்டை வைத்தார். அவர் ஒரு படி மேலே போய், அமெரிக்காவிலிருந்து நிதியுதவி வருவதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், நாகர்கோவிலில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சோன்டெக் ரெய்னர் ஹெர்மன் என்ற ஜெர்மனி நாட்டுக்காரர், போராட்டக் குழுத் தலைவர் உதயகுமாருடன் தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பில் இருந்ததும் உறுதியானது. இதையடுத்து ஹெர்மன் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு நிதி உதவி அளித்ததாக, 4 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது சி.பி.ஐ.யும், தமிழக குற்றப்பிரிவு போலீசாரும் வழக்கு பதிவு செய்து உள்ளதாக மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் நேற்று மாலையில் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வெளிநாடுகளில் இருந்து பண உதவி பெற்று வரும் 4 தன்னார்வ அமைப்புகள், அந்த பணத்தை கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு கொடுத்து உள்ளன. இதுபற்றி மத்திய உள்துறை தீவிர விசாரணை நடத்தியது.
இதைத்தொடர்ந்து அந்த 4 தன்னார்வ அமைப்புகள் மீதும் மத்திய சி.பி.ஐ. போலீசார் வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். வெளிநாட்டு நிதி உதவி ஒழுங்குமுறை சட்டத்தை மீறியதாக அந்த தொண்டு நிறுவனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. தமிழக குற்றபிரிவு போலீசாரும் இதேபோல் வழக்குகள் பதிவு செய்து உள்ளனர்.
இந்த முறைகேட்டை தொடர்ந்து, மேலும் அந்த நிறுவனங்கள் போராட்டக்காரர்களுக்கு நிதி உதவி அளிப்பதை தடுக்கும் வகையில், அந்த 4 தொண்டு நிறுவனங்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன என்று சிங் தெரிவித்தார்.
இதற்கிடையை கைது செய்யப்பட்ட ஜெர்மனிக்காரர் ஹெர்மன் நேற்று ஜெர்மனிக்கு நாடு கடத்தப்பட்டார். சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்த அவர் விசா விதிமுறைகளை மீறி தங்கியிருந்தார். மேலும் கூடங்குளம் போராட்டக் குழுவினருக்கும் உதவி வந்தார். மேலும் அவர் நாகர்கோவில் வருவதற்கு எந்தக் காரணமும் இல்லை. கூடங்குளம் போராட்டக் குழுவினருக்கு உதவுவதற்காக அவர் வந்து தங்கியிருந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications