பிரபாகரனை இந்தியாவே கொன்றிருக்க வேண்டும்-மாஜி யு.எஸ். தூதரக அதிகாரி

China's Nightmare, America's Dream: India as the next global power என்ற பெயரில் இந்த அவெரி ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில்தான் இப்படிச் சொல்லியுள்ளார். அந்த நூலில் அவெரி சொல்லியுள்ளவற்றிலிருந்து சில பகுதிகள்...
ராஜீவ் காந்தி படுகொலையானது இந்தியாவின் பிராந்திய தலைமைத்துவம் மீதான தாக்குதலாகும். இதை இந்தியா உணர்ந்து கொள்ளாமல் போய் விட்டது. உண்மையில் ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்திற்குப் பின்னர் இந்திய ராணுவத்தை மீண்டும் இலங்கைக்கு அனுப்பியிருக்க வேண்டும். வேலுப்பிள்ளை பிரபாகரனை பிடித்து வந்திருக்க வேண்டும் அல்லது தாக்குதல் நடத்திக் கொன்றிருக்க வேண்டும். இதைச் செய்ய இந்தியா தவறி விட்டது.
பிரபாகரனை இந்தியாவுக்குக் கொண்டு வந்து விசாரணை நடத்தி தண்டித்திருந்தால், அது இப்பிராந்தியத்திற்கு மட்டுமல்லாமல் உலகத்திற்கும் ஒரு வலிமையான செய்தியாக அமைந்திருக்கும். தனது தலைவர்களை பிறரின் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதில் இந்தியா சற்றும் தயங்காது என்பதாக அந்த செய்தி அமைந்திருக்கும். தனது அரசியல் அமைப்பையும், கட்டமைப்பையும், பாதுகாப்பையும் சமரசம் செய்து கொள்ள இந்தியா அனுமதிக்காது என்ற செய்தி போயிருக்கும்.
மேலும் தெற்காசியாவில் தனக்கு எந்த சவால் விடுக்கப்பட்டாலும் அதை சமாளித்து வெற்றி பெறும் திறன் தனக்கு உள்ளது என்பதை பிற நாடுகளுக்கு அது புரிய வைத்திருக்கும்.
ஆனால் ராஜீவ் காந்தி கொலையால் பயந்து போன இந்தியா, நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் அமைதியாகி விட்டது. தான் ஒரு பிராந்திய சக்தி என்பதையும் அது உணர்த்த முன்வரவில்லை, தீவிரமாக செயல்பட்டு ஒரு உலக சக்தியாகும் வாய்ப்பையும் அது பயன்படுத்திக் கொள்ள முன்வரவில்லை.
ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிந்னர் இலங்கைக்குள் நுழைய இந்தியாவுக்கு மிகப் பெரிய வாய்ப்பு இருந்தது. ஆனால் அதை இந்தியா சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஒரு வேளை இந்தியா அதைப் பயன்படுத்தியிருந்தால் இன்று அது மிகப் பெரிய உலக சக்தியாக உருவெடுக்க உபயோகமாக இருந்திருக்கும்.
இருப்பினும் ராஜீவ் காந்தி கொலைக்குப் பின்னர் 7 ஆண்டுகள் கழித்து 1998ம் ஆண்டு பொக்ரானில் அது நடத்திய அணு குண்டுச் சோதனை, இந்தியாவை உலக அரங்கில், குறிப்பாக அமெரிக்காவின் கண்களில் ஒரு முக்கிய சக்தியாக காட்ட உதவியது. இந்தியாவைப் பொறுத்தவரை அது புத்திசாலித்தனமான முடிவுதான். அமெரிக்கர்களுக்கும் அதுவரை சுவாரஸ்யமில்லாத ஒரு நாடாக இருந்த இந்தியா, விஷயம் நிறைந்த ஒரு நாடாகத் தோன்ற ஆரம்பித்தது என்பதும் உண்மை என்று கூறியுள்ளார் அவெரி.
இந்த அவெரி வேறு யாருமில்லை, பில் கிளிண்டன் மற்றும் ஜார்ஜ் புஷ் அதிபர்களாக இருந்தபோது அமெரிக்க வெளியுறவுத்துறையில் பணியாற்றியவர். இந்தியாவிலும் தூதரக அதிகாரியாக பணியில் இருந்தவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications