ஏசி இயந்திரத்தில் கேஸ் கசிவு: ராஜ்யசபா ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ராஜ்யசபாவில் கேஸ் லீக்கான வாடை வந்ததால் அவை 15 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று ராஜ்யசபா கூடி அரசு பணிகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீர் என்று கேஸ் வாடை வருவதாக எம்.பி.க்கள் புகார் தெரிவித்தனர். அவையில் அமர்ந்திருந்த பலருக்கும் கேஸ் வாடை வந்ததால் அவர்கள் மூக்கைப் பொத்திக் கொண்டனர். இதையடுத்து சபாநாயகர் அவையை 15 நிமிடங்கள் ஒத்திவைத்தார். உடனே எம்.பி.க்கள் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினர். அவையில் உள்ள ஏதாவது ஏசி இயந்திரத்தில் இருந்து தான் கேஸ் கசிந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக அவை முதலில் 30 நிமிடங்கள் ஒத்திவைக்கப்படுவதாகக் கூறப்பட்டது இறுதியில் 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications