டெங்கு காய்ச்சல்: நாட்டு மருந்து வி்ற்பனை ஜோர்
தென்காசி: டெங்கு காய்ச்சலை தடுக்கும் நாட்டு மருந்துகள் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழ்கத்தில் முலிகை வளம் கொண்ட வனம் மேற்குதொடர்ச்சி மலைபகுதியில் உள்ளது. இங்கு அகத்தியர் உள்ளிட்ட பல்வேறு முனிவர்களும், சித்தர்களும் இப்பகுதி வாழ் மக்களின் நோயை தீர்க்கும் பொருட்டு பல்வேறு முலிகைகளையும் கண்டறிந்து நோய்க்கு தக்கவாறு மருந்து அருளியுள்ளனர். காலப்போக்கில் மனித இனம் வளர வளர நாட்டு மருத்துவமும், மூலிகைச் செடிகளும் அழியும் நிலை ஏற்பட்டது. அதன்பி்ன் ஆங்கில மருத்துவம் வந்த பின் பலரும் ஆங்கில வைத்திய முறையை பின்பற்றித் துவங்கினர். ஆங்கில முறைப்படி வைததியம் செய்தால் உடனடியாக நோயை குணப்படுத்த முடியும். நிரந்தரமாக குணப்படுத்த முடியாது.
அகஸ்தியர் அருளிய மூலிகை, நாட்டு மருத்துவத்தின் பயன் இப்போது பொதுமக்களுககு புரியத் தொடங்கியுள்ளது. டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் சக்தி நிலவேம்புக்கு உள்ளது என்பதை மக்கள் அறிந்துள்ளனர். ஏராளமானோர் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நில வேம்பு பொடியை வாங்கி தண்ணீரில் கலந்து சுண்ட காய்ச்சி வற்றியவுடன் கசாயமாக குடிக்கின்றனர். இதன் மூலம் காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் இந்த நிலவேம்பு பொடி சித்த, ஆயுர்வேத மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுவதால் பொதுமக்கள் அத்தகைய மருத்துவமனைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். மேலும் வீட்டுக்கு வீடு துளசி, தூதுவளை, கீழாநெல்லி, ஓமம் மற்றும் பல வகை மூலிகை செடிகளை வளர்க்க தொடங்கியுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications