போலீஸ் பிடியில் ராமஜெயம் கொலையாளி?-வெளியில் சொல்ல முடியாத காரணத்திற்காக கொலை??

முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட திமுக செயலாளருமான கே.என்.நேருவின் தம்பியும், பிரபல தொழில் அதிபருமான ராமஜெயம் (40) கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி காலை வாக்கிங் சென்றபோது கடத்தி படுகொலை செய்யப்பட்டார்.
ராமஜெயம் படுகொலை சம்பவம் தொடர்பாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் மேற்பார்வையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் ராமஜெயம் சம்பந்தப்பட்ட பலரிடமும், பிரபல ரவுடிகளிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆனால் குற்றவாளி குறித்த தகவலோ அல்லது அதற்கான தடயத்தையோ போலீசாரால் நெருங்க முடியவில்லை.
இந்த நிலையில் திருச்சி வந்த போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் ராமஜெயம் கொலை வழக்கை திருச்சி நகர கமிஷனராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் அமல்ராஜ் வசம் ஒப்படைத்தார். கமிஷனர் அமல்ராஜ் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க கடந்த வாரம் புதிய தனிப்படை ஒன்றை அமைத்தார். அந்த தனிப்படை கொடுத்த தகவலின் பேரில் ராமஜெயம் கொலை வழக்கு சூடு பிடித்துள்ளது. அதன்படி ராமஜெயத்துக்கு மிக நெருக்கமான ஒரு வாலிபர் தான் அவரை கொலை செய்துள்ளார் என்ற உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
வெளியே சொல்ல முடியாத சில தனிப்பட்ட காரணங்களுக்காக அவரைக் கொலை செய்தேன் என அந்த வாலிபர் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக கூறப்பட்டுகின்றது.
இந்த தகவல் தமிழக டி.ஜி.பி. ராமானுஜத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். ராமஜெயம் அரசியல் தொடர்புடைய தொழில் அதிபர் என்பதால் முதல்வர் ஜெயலலிதா கவனத்திற்கு இந்த தகவல் கொண்டு செல்லப்பட்டு அவர் அனுமதி அளித்த பிறகே வெளியிடப்படும் என கூறப்படுகின்றது.
எனவே விரைவில் ராமஜெயம் கொலை வழக்கு விவரங்களையும், கொலையாளி யார் என்ற மர்ம முடிச்சுகளையும் அவிழ்க்க போலீசார் தயாராகி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications