நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்: 4 மாநில அரசுகளின் தொடர்பு குறித்து விசாரணை நடத்துகிறது சிபிஐ
டெல்லி: பிரதமர் மன்மோகன்சிங் மீதான நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் மேற்குவங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசுகளுக்கு உள்ள தொடர்பு குறித்தும் சிபிஐ விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
மேற்குவங்கம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் மொத்தம் 220 நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விவகரங்களைத் தர வேண்டும் என்று 4 மாநிலங்களின் மின்சாரம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சகங்களிடம் சிபிஐ இன்று கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களுக்காக யாரேனும் பரிந்துரை செய்திருக்கின்றனரா? என்பது குறித்தும் சிபிஐ விசாரித்து வருகிறது.
முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் நாட்டுக்கு ரூ1 லட்சம் கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டிருப்பதாக தணிக்கைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக ஊழல் கண்காணிப்பகத்திடம் பாரதிய ஜனதா கட்சியினர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து சிபிஐ விசாரிக்க கண்காணிப்பகம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரையைத் தொடர்ந்து நிலக்கரி ஒதுக்கீட்டில் முறைகேடு நிகழ்ந்துள்ளது? அல்லது ஒதுக்கீடு பெற்ற நிலக்கரி சுரங்க நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனவா? என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளன.
இதன் முதல் கட்டமாக மாநில அரசுகளிடம் விவரங்களைக் கோரியுள்ளது சிபிஐ.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications