சியாச்சினிலிருந்து படைகளை விலக்குவது குறித்து இந்தியா-பாகிஸ்தான் இன்று பேச்சுவார்த்தை
இஸ்லாமாபாத்: உலகிலேயே உயரமான போர்முனையாக வர்ணிக்கப்படும் சியாச்சின் பனிச்சிகரத்திலிருந்து இருநாட்டுப் படைகளையும் விலக்கிக் கொள்வது தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு செயலர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
இமயமலையின் சியாச்சின் பனிச்சிகரம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியாகும். அண்மையில் இங்கு ஏற்பட்ட பெரும் பனிப்பாறை சரிவில் சிக்கி 139 பாகிஸ்தான் படையினர் உயிரோடு புதைந்து போயினர். அண்மையில் அவர்கள் நாட்டுக்காக உயிர்நீத்த மாவீரர்களாகவும் பாகிஸ்தான் அரசால் சிறப்பிக்கப்பட்டனர். பாகிஸ்தான் தரப்பில் இருந்து தொடர்ந்தும் சியாச்சினிலிருந்து ராணுவத்தை விலக்க இந்தியாவும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சியாச்சின் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் பாதுகாப்புத் துறை செயலாளர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இன்று தொடங்குகிறது. பாகிஸ்தான் தரப்பில் அந்நாட்டு பாதுகாப்பு செயலர் நர்கீஸ் சேத்தியும் இந்தியத் தரப்பில் சஷிகாந்த் சர்மாவும் பங்கேற்கிறார்.
மேலும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சராக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட நவீத்தையும் இந்திய பாதுகாப்புச் செயலாளர் சஷிகாந்த் சர்மா சந்தித்துப் பேச உள்ளார்.
ஆனால் பாகிஸ்தானில் நடைபெறும் பேச்சுவார்த்தையின் முடிவில் எந்த ஒரு முக்கியமான அறிவிப்பும் வெளியாகாது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயம் இது. அதனால் எதனையும் நீங்கள் எதிர்பார்க்காதீர்கள் என்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி ஏற்கெனவே கூறியிருந்தார்.
சியாச்சினிலிருந்து ஒரு போதும் படைகளை விலக்கிக் கொள்ளமாட்டோம் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்று ஏ.கே.அந்தோணி திட்டவட்டமாகக் கூறியிருந்தார். இன்றைய பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் இந்தியத் தரப்பில் இந்த நிலைப்பாடே விளக்கப்படும் என்று தெரிகிறது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications