என்னத்தைச் சொல்ல... மதுரை ஆதீனம் விரக்தி!

நித்தியானந்தாவின் 2வது கைது படலம் பெங்களூர் அருகே ராமநகரத்தில் நேற்று நடந்தேறியது. அவரை ஒரு நாள் சிறைக் காவலுக்கு கோர்ட் அனுப்பி விட்டது. இந்தத் தகவல்கள் மதுரை ஆதீனத்தை அதிர்ச்சியுற வைத்துள்ளன. இதனால் அவர் சரியாக சாப்பிடாமல், விரக்தியுடன் காணப்படுகிறாராம்.
இந்த நிலையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அதுகுறித்த விவரம்
கேள்வி: இவ்வளவு நடந்து கொண்டிருந்தும் எதுவும் பேசாமல் இருக்கிறீர்களே..
பதில்: என்ன மவுனம்... இப்போது பேசிக்கொண்டு தானே இருக்கிறேன்.
கேள்வி: நித்தியானந்தா கைது குறித்து என்ன கூறுகிறீர்கள்?
பதில்: என்னத்தை சொல்ல...பொறுமையாக இருப்போம்.
கேள்வி: இப்போதாவது நீங்கள் முடிவு எதுவும் எடுப்பீர்களா?
பதில்: முடிவு எதுவும் எடுக்கவில்லை.
கேள்வி: இளைய ஆதீனத்தை நியமிக்கும் அதிகாரம் உங்களுக்கு இருப்பது போல், அவரை அந்த பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் உங்களுக்கு உள்ளதா?
பதில்: நீக்கும் அதிகாரம் நிச்சயம் உண்டு.
கேள்வி: 2004,ல் இளைய ஆதீனமாக சுவாமிநாதன் என்ற 16 வயது சிறுவனுக்கு பட்டம் சூட்டினீர்கள். சிறிது காலத்தில் அவரை நீங்களே நீக்கி மடத்தில் இருந்து வெளியேற்றினீர்கள்.
பதில்: ஆமாம் நீக்கினேன்.
கேள்வி: தற்போது நித்தியானந்தா வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளாரே, சுவாமிநாதனை போல் இவரையும் நீக்குவீர்களா?
பதில்: இன்னும் முடிவு எடுக்கவில்லை. நீதிமன்றத்தில் என்ன முடிவு வருகிறது என்று பார்ப்போம். அதுவரையில் பொறுமையாக இருப்போம் என்றார் ஆதீனம்.
என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் மதுரை ஆதீனம் தவிக்கிறாரா அல்லது நித்தியானந்தா தரப்பு இன்னும் கூடவே சுற்றியிருப்பதால் எந்த முடிவையும் எடுக்க விடாமல் தடுக்கப்படுகிறாரா என்று ஆதீன பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications