கொலை முயற்சி, பேருந்து எரிப்பு வழக்கில் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்
விழுப்புரம்: பேருந்து எரிப்பு மற்றும் கொலை முயற்சி வழக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட 4 பேருக்கு விழுப்புரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
கடந்த 1-6-2008 அன்று புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அது விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் எல்.ஆர். பாளையம் அருகில் சென்றபோது பேருந்தில் இருந்த திருபுவனையை சேர்ந்த மணிபாலன், பத்மநாபன், சந்திரசேகர், திருமா இளங்கோ, எட்டியான் என்கிற வேங்கையன், விஜயன், விழுப்புரம் சுரேந்திரன், சித்தாமூர், சுப்பிரமணி, பாசறை பாலு, சண்முகம், விஜி, தேவநாதன், பார்த்தசாரதி, வடிவேலன், சவுந்திரராஜன், பெருமாள், மகேந்திரன் ஆகியோர் டிரைவர் மோகனை தாக்கி பேருந்தை நிறுத்த உத்தரவிட்டனர்.
படிக்கட்டுகளில் வழி விடாமல் நமது சமுதாயத்தை சேர்ந்தவரை கடலூர் மாவட்டத்தில் வெட்டிக் கொன்றுவிட்டனர். எனவே, நம் தலைவர் திருமாவளவன் கூறியது போன்று பேருந்தில் உள்ளவர்களை அடித்து, உதைத்து, வெட்டிக் கொலை கொல்லுங்கள், பேருந்தையும் கொளுத்துங்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் கண்டக்டர் ஆறுமுகத்தை தலையில் வெட்டினர். டிரைவர் மோகனை தடியால் தாக்கினர். பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதோடு பேருந்துக்கு தீ வைத்து கொளுத்திவிட்டு ஆறுமுகத்திடம் இருந்த ரூ.5,500ஐ பறித்துக் கொண்டு சென்றனர்.
இது குறித்து வளவனூர் போலீசார் மணிபாலன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்தார். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் எண்-2 ல் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் இருந்த விழுப்புரம் சுரேந்திரன், சித்தாமூர் சுப்ரமணி, பாசறை பாலு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகிய 4 பேருக்கு மாஜிஸ்திரேட்டு எல்.கலைவாணி பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications