தேவாலயத்திற்கு தீ வைத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி போராட்டம் நடத்திய பங்குத்தந்தை உள்ளிட்ட 100 பேர்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு தீவைத்த நபர்களை கைது செய்யக் கோரி அனுமதியின்றி மனித சங்கிலி போராட்டம் நடத்திய பங்குத்தந்தை சகாயராஜ் ராயன் உள்ளிட்ட 100 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகில் உள்ளது சொக்கன் குடியிருப்பு. இங்கு புனித யாகப்பர் தனிஸ்லஸ் ஆலயம் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மர்ம நபர்கள் இந்த ஆலயத்திற்கு தீ வைத்ததில் அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது. இது குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் போலீசார் நடவடிக்கையில் போதிய வேகம் இல்லை என்றும், குற்றவாளிகளை காப்பாறும் நோக்கோடு மெத்தனம் காட்டி வருவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில் ஆலயத்திற்கு தீ வைத்தவர்களை உடனே கைது செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி காந்தி நகரிலிருந்து தட்டார்மடம் ரோடு வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. பங்குத்தந்தை சகாயராஜ் ராயன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 100 பேர் கலந்து கொண்டனர்.
பேலீசார் அனுமதி இன்றி மனித சங்கிலி போராட்டம் நடத்திய பங்குத்தந்தை உள்ளிட்ட 100 பேர் மீது தட்டார்மடம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications